என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாடு முட்டியதில் 3 பேர் படுகாயம்
- இந்நிகழ்ச்சியை காண காரிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.
- 12 கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட எருதாட்டம் நடந்தது.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரி மங்கலம் ராமசாமி கோவில் கட்டுப்பாட்டில் உள்ள 12 கிராமங்களின் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி திருவிழா நடந்து வருகிறது.
வழக்கம்போல் இந்த ஆண்டும் எருதுவிடும் விழா நேற்று மாலை 3 மணிக்கு துவங்கியது. இதில் ஏரியின் கீழூர், கோணகவுண்டனூர், கெரகோடஅள்ளி, வெள்ளையன் கொட்டாவூர், கொள்ளுப்பட்டி, முருக்கம்பட்டி, மோட்டுப்பட்டி, காரிம ங்கலம் மேல்வீதி உட்பட 12 கிராமங்களிலிருந்து எருதுகள் அலங்கரிக்க ப்பட்டு ராமசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து எருது விடும் விழா நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று தாங்கள் அழைத்து வந்த காளைகளை தருமபுரி - மொரப்பூர் ரோடு, கடைவீதி ஆகிய பகுதிகளில் அழைத்து சென்றனர். இதில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை 12 கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட எருதாட்டம் நடந்தது.
இந்நிகழ்ச்சியை காண காரிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.
இந்த நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க வந்த செல்ல மாரமபட்டியைச் சேர்ந்த ஸ்ரீதர் (21) மாடுகொம்பு குத்தியதில் படுகாயம் அடைந்தார். அவரை சிலர் மீட்டு தருமபுரி தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இதே போல் மேலும் இருவருக்கும் மாடு முட்டியதில் காயமடைந்தனர்.
எருது விடும் விழா காரணமாக காரிமங்கலம் நகரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்