search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வேன் அடியில் சிக்கி டிரைவர் பலி
    X

    வேன் அடியில் சிக்கி டிரைவர் பலி

    • ஏரியில் உள்பகுதியில் வேனை இறக்கியபோது திடீரென வேன் சக்கரம் ஏரி மண்ணில் புதைந்து ஏரிக்குள் சரிந்தது.
    • சோமன் பிக்கப் வேன் அடியில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    காரிமங்கலம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை திருமாலிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சோமன் (வயது 42). இவர் சொந்தமாக பிக்கப் வேன் வைத்துள்ளார். இதில் முட்டைகோஸ் லோடு ஏற்றி செல்வது வழக்கம்.

    இந்நிலையில் பிக்கப் வேனில் விற்பனை ஆகாத முட்டைக்கோசுகளை ஏற்றிக்கொண்டு முள்ளனூர் ஏரியில் உள்ள மீன்களுக்கு உணவாக கொட்ட சென்றுள்ளார்.

    அப்போது ஏரியில் உள்பகுதியில் வேனை இறக்கியபோது திடீரென வேன் சக்கரம் ஏரி மண்ணில் புதைந்து ஏரிக்குள் சரிந்தது. இதில், சோமன் பிக்கப் வேன் அடியில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×