search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீக்காயம் அடைந்த முதியவர் சாவு
    X

    தீக்காயம் அடைந்த முதியவர் சாவு

    • தனக்கோடி கடந்த 12-ந்தேதி வீட்டில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று தனக்கோடி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள கூரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனக்கோடி (வயது65).

    இந்த நிலையில் அடிக்கடி வீட்டில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட தனக்கோடி கடந்த 12-ந்தேதி வீட்டில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தனக்கோடி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×