search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
    X

    கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

    • தோட்டத்து கிணற்றின் அருகே திடீரென தவறி கிணற்றின் உள்ளே விழுந்து விட்டார்.
    • தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி கிணற்றில் உள்ளே இறங்கி இறந்து கிடந்த தங்கராஜை மேலே கொண்டு வந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கொடுவாய், தொட்டிபாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் தங்கராஜ் (வயது 55). விவசாயி. இவர் நேற்று தனது தோட்டத்து கிணற்றின் அருகே அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென தவறி கிணற்றின் உள்ளே விழுந்து விட்டார்.

    அந்த பகுதியில் வந்தவர்கள் இதனை பார்த்து உடனடியாக அவினாசிபாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி கிணற்றில் உள்ளே இறங்கி இறந்து கிடந்த தங்கராஜை மேலே கொண்டு வந்தனர். பின்னர் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×