என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விவசாயி ஓட்டு வீட்டை பிரித்து நகை பணம் கொள்ளை
- விவசாயி வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார்.
- ஓட்டு வீட்டின் மேல் ஓடுகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு இருந்தது.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள தேவன்குடி கிராமம் மேல தெருவில் வசிப்பவர் பெருமாள் (வயது 55). விவசாயி, இவரது மனைவி தெய்வக்கண்ணி.
இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
சம்பவத்தன்று பெருமாள் அருகிலுள்ள வீரமாங்குடி மடம் கிராமத்திற்கு தனது உறவினர் இறந்த துக்கத்திற்கு அவரும், அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர்.
மறுநாள் வீட்டை வந்து பார்த்தபொழுது இவரது ஓட்டு வீட்டின் மேல் ஓடுகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு வீட்டின் உள்ளே மர்ம நபர்கள் இறங்கி வீட்டில் இருந்த பீரோவை உடைத்து பீரோவில் இருந்த தங்க தோடு, தங்க மோதிரம், தங்க காசு, உள்ளிட்ட 6 கிராம் நகைகளையும், ரூபாய் 30 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் எடுத்து சென்றுவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பெருமாள் கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்