search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விடுதியின் இடைநிலை காப்பாளர், பட்டதாரி காப்பாளனிகளுக்கு கேடயம்- கலெக்டர் வழங்கினார்
    X

    மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுதொகை, சான்றிதழ், கேடயங்களை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    விடுதியின் இடைநிலை காப்பாளர், பட்டதாரி காப்பாளனிகளுக்கு கேடயம்- கலெக்டர் வழங்கினார்

    • கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 390 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 390 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட புனல்வாசல் அரசு பள்ளி மாணவர் விடுதி , தஞ்சாவூர் அரசு கல்லூரி மாணவியர் விடுதி , தஞ்சாவூர் அரசு கல்லூரி மாணவியர் விடுதியின் இடைநிலைக்காப்பாளர், பட்டதாரி காப்பாளனிகளுக்கு பரிசுத்தொகை சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா , கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)ஸ்ரீகாந்த் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்ரேணுகாதேவி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×