search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரம்: தி.மு.க. கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம்
    X

    ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரம்: தி.மு.க. கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம்

    • கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் இன்று மாலை 4 மணிக்கு போராட்டம்.
    • இந்தியா கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பங்கேற்பு.

    கோவை:

    கோவையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் முன்பு அண்ணாபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜி.எஸ்.டி. தொடர்பாக நகைச்சுவையாக பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மறுநாளே ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து தான் அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார். நிர்மலா சீதாராமனிடம் அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    ஜி.எஸ்.டி வரி தொடர்பாக கேள்வி எழுப்பிய ஓட்டல் உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார் என தகவல் பரவியது.

    இந்த விவகாரத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்தநிலையில் தி.மு.க. கூட்டணியான இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று நிர்மலா சீதாராமனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடக்க உள்ளது.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலைசிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

    Next Story
    ×