என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ராஜா வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி பலி
- பரமத்திவேலூர் தாலுகா வெங்கரைப் பகுதியில் ராஜாவாய்க்கால் ஓரத்தில் இருந்த ஒரு திட்டில் அமர்ந்துள்ளார். அப்போது நிலை தடுமாறி வாய்க்காலில் விழுந்ததாக தெரிகிறது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லோகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரைப் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 55). இவர் நேற்று இரவு அந்தப் பகுதியில் உள்ள ராஜாவாய்க்கால் ஓரத்தில் இருந்த ஒரு திட்டில் அமர்ந்துள்ளார். அப்போது நிலை தடுமாறி வாய்க்காலில் விழுந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் லோகநாதன் வெகு நேரமா கியும் வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தனர், ராஜாவாய்க்கால் பகுதிக்கு வந்து தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து வேலாயு தம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கோமதி தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள், சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து ராஜாவாய்க்காலில் தேடினர்.
அப்போது தலையில் அடிபட்டு பலத்த காயத்து டன் இறந்த நிலையில் லோகநாதன் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தார். அவரை மீட்ட தீயணைப்பு துறையினர், இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லோகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்