search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் - மாவட்ட செயலாளருடன் சந்திப்பு
    X

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் - மாவட்ட செயலாளருடன் சந்திப்பு

    • புதிய நிர்வாகிகள், ஊட்டி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முபாரக்கை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    • ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட திமுக., இளைஞர் அணி புதிய அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை மாநில இளைஞர் அணி செயலா ளரும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதன்படி மாவட்ட அமைப்பாளராக இமயம் சசிகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    துணை அமைப்பாளர்களாக பாபு,நௌபுல், நாகராஜ், முரளிதரன், பத்மநாபன், வினோத்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட தி.மு.க இளைஞரணி புதிய நிர்வாகிகள், ஊட்டி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முபாரக்கை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பொன்தோஸ், ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா, பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ், நெல்லியாளம் நகர செயலாளர் சேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பில்லன், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    Next Story
    ×