என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செங்கோட்டையில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.15 ஆக சரிவு- விவசாயிகள் கண்ணீர்
- வழக்கமாக இப்பகுதியில் சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும்
- வெளி மாவட்டங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் சின்ன வெங்காயம் விலை குறைந்துவிட்டதாக வியாபாரிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களான இலத்தூர், அச்சன்புதூர், சீவநல்லூர், கரிசல் குடியிருப்பு, சிவராமபேட்டை உள்ளிட்ட பகுதி களில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது.
இந்த பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக பூ மகசூலான தக்காளி, வெண்டை, சின்ன வெங்காயம், மிளகாய், சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். வழக்கமாக சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும் நிலையில், மழை பொய்த்ததால் 500 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே நடைபெற்றது.
கடந்த மாதத்தில் இருந்து சின்ன வெங்காயம் எடுக்கும் பணி தொடங்கியது. தொடக்கத்தில் அதன் விலை ரூ.35 ஆக இருந்த நிலையில், அதிக சாகுபடி காரணமாக அதன் விலை தற்போது ரூ.15-க்கும் குறைவாக சென்றுவிட்டது.
மேலும் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்தும் வரத்து அதிகரித்துள்ளதால் சின்ன வெங்காயம் விலை மிகவும் குறைந்துவிட்டதாக வியாபாரிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது:-
2 மாத பயி ரான சின்ன வெங்காயத்திற்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும். விளைவதற்க்கு ஏற்ற நிலமாக உள்ளதால் கூடுதலாக பயிர் செய்கிறோம்.
ஒரு ஏக்கருக்கு உழுவது முதல் களையடுத்தல், அறுவடை வரை ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 75 ஆயிரம் வரை செலவாகிறது. தொடக்கத்தில் ரூ.40 வரை கிடைத்ததால் லாபமாக இருந்த நிலையில் தற்போது ரூ.15-க்கு விலை போகிறது.
கோரிக்கை
இதனால் எங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வரும் பெரும் நஷ்டத்தால் பெரும்பாலோர் சின்னவெங்காயம் நடவை கைவிட்டு வருகின்றனர். பாடுபட்ட நாங்கள் லாபம் ஈட்ட முடியாத நிலையில் இடைத்தரகர்கள் அதிக லாபம் சம்பாதிக்கின்றனர்.
எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசே உரிய விலை நிர்ணயிக்கவும், மழைகாலங்களில் உரிய முறையில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் என வேதனையுடன் தெரிவிகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்