search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விண்ணப்பம் வாங்க சென்ற பள்ளி மாணவர் மாயம்
    X

    விண்ணப்பம் வாங்க சென்ற பள்ளி மாணவர் மாயம்

    • சுவாமிமலை அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி சேர்வதற்கு கும்பகோணம் சென்று கல்லூரியில் விண்ணப்பம் வாங்க சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • கார்த்திகேயன் எங்கே சென்றார்? யாராவது மர்ம நபர்கள் அவரை கடத்தி உள்ளார்களா? என பல்வேறு கோணங்களை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கபிஸ்தலம்

    கபிஸ்தலம் அருகே உள்ள தியாக சமுத்திரம் வடக்கு தெருவில் வசிப்பவர் காமராஜ் மகன் கார்த்திகேயன் வயது 17,இவர் சுவாமிமலை அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி சேர்வதற்கு கும்பகோணம் சென்று கல்லூரியில் விண்ணப்பம் வாங்க சென்றவர் வீடு திரும்பவில்லை.

    உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாலிபர் கார்த்திகேயனை தேடியும் கிடைக்காதால் மனம் உடைந்து அவரது தந்தை காமராஜ் கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சிறப்பு இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஆகியோர் வழக்கு பதிவு செய்து வாலிபர் கார்த்திகேயன் எங்கே சென்றார்? யாராவது மர்ம நபர்கள் அவரை கடத்தி உள்ளார்களா? என பல்வேறு கோணங்களை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×