search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கடலூர் அருகே  சாலையில் கிடந்த மணிபர்சை போலீசில் ஒப்படைத்த மாணவர்கள்
    X

    சாலையில் கிடந்த மணிபர்சை போலீசில் ஒப்படைத்த மாணவர்கள்.

    கடலூர் அருகே சாலையில் கிடந்த மணிபர்சை போலீசில் ஒப்படைத்த மாணவர்கள்

    • மல்யுத்த மாணவர்கள்சென்ற போது, சாலையில் ஒரு மணி பர்ஸ் கிடந்தது. அவர்கள் அந்த பர்சை எடுத்து பார்த்தபோது அரசு ஆவணங்கள் மற்றும் பணம் இருந்தது.
    • போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கரிடம் சம்பவத்தை கூறி பணத்துடன் கூடிய பர்சை ஒப்படைத்தார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கன்னியக் கோயில் பகுதியில் மல்யுத்த மாணவர்கள் ஹரிகரன், அரிய புத்திரன் ,அரவிந்தன் சூர்யா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் .

    அப்போது சாலையில் ஒரு மணி பர்ஸ் கிடந்தது. அவர்கள் அந்த பர்சை எடுத்து பார்த்தபோது அரசு ஆவணங்கள் மற்றும் பணம் இருந்தது. இதனை தொடர்ந்து மல்யுத்த பயிற்சியாளர் ராஜேஷ் கடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கரிடம் சம்பவத்தை கூறி பணத்துடன் கூடிய பர்சை ஒப்படைத்தார். பின்னர் போலீசார் பர்ஸ் யாருடையது என விசாரணை நடத்தியதில் சென்னையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பதும், என்பவருக்கு சொந்தமானது என்பதும், திருநள்ளாறுக்கு செல்லும் போது தனது பர்ஸ் தொலைந்து விட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் சார்பாக ராஜ ஜெயசீலனிடம் துணைப் போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் முன்னிலையில் பணத்துடன் கூடிய பர்சை ஒப்படைத்தனர். மணி பர்சை கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்த மாணவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார். அப்போது இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி உடன் இருந்தார்.

    Next Story
    ×