என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த ஆசிரியர் சஸ்பெண்டு
- ஆபாசமாக படம், வீடியோ எடுத்த ஆசிரியர் பன்னீர்செல்வம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- இதையடுத்து ஆசிரியர் பன்னீர்செல்வத்தை, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவிகளை ஆபாசமாக படம், வீடியோ எடுத்த ஆசிரியர் பன்னீர்செல்வம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஆசிரியர் பன்னீர்செல்வத்தை, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், நாமக்கல் தாசில்தார் சக்திவேல், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) பாலசுப்பிரமணி மற்றும் திட்ட அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆசிரியர் செய்த தவறுகளை கண்டு கொள்ளாமல் இருந்த தலைமை ஆசிரியர் ஷர்மிளாவை இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர்கள் மீது புகார் அளித்த மாணவிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மாதம் ஒரு முறை பெற்றோர்களை அழைத்து பள்ளியில் கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை தொடந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்