search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த பெண் சாவு
    X

    சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த பெண் சாவு

    • அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவு அருகில் உள்ள காத்திருப்போர் அறையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் மயங்கி கிடந்தார்.
    • டாக்டர்கள் அந்த பெண்ணை பரிசோதித்தபோது அவர் இறந்தது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவு அருகில் உள்ள காத்திருப்போர் அறையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் மயங்கி கிடந்தார். அங்கு வந்த தூய்மை பணியாளர் சிவா என்பவர் அந்த பெண்ணை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார். டாக்டர்கள் அந்த பெண்ணை பரிசோதித்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. இதுபற்றி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் விரந்து வந்து அந்த பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×