என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு
- கொடுக்கல் வாங்கல் தகராறு படுகொலையில் முடிந்தது
- ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாவின் மாமியார் வசந்தாவை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி திப்பம்பட்டி அருகே உள்ள கொள்ளு பாளையத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி ராதா (வயது 30). இவர்க ளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் பாண்டியின் தாய் வசந்தா (60) என்பவர் வசித்து வருகிறார்.
கடந்த 14-ந் தேதி இவர்கள் அனைவரும் குழந்தைகளுடன் மொபட்டில் மாசாணியம்மன் கோவிலுக்கு ஊசி, பாசி விற்பதற்காக சென்றனர். பின்னர் இரவு 7 மணியளவில் வீட்டிற்கு புறப்பட்டனர். ஆனை மலை- கோட்டூர் ரோட்டில் அய்யாமடை பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்ற போது பணம் கொடுக்கல் வாங்கலில் ராதாவிற்கும், வசந்தாவிற்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வசந்தா, ராதாவின் வயிற்றில் காலால் மிதித்தார். கையில் குழந்தை இருந்ததால் அவரால் தடுக்க முடியவில்லை. வலி தாங்க முடியாமல் தவித்த ராதா மறுநாள் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து ஸ்கேன் எடுக்கு மாறு கூறி உள்ளனர். ஆனால் அவர் ஸ்கேன் எடுக்காமல் மருந்து மாத்திரைகளை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றார். நேற்று மாலை மீண்டும் ராதாவிற்கு வயி ற்று வலி ஏற்பட்டு மயங்கி னார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை ஆம்பு லன்சு மூலமாக பொள்ளா ச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாவின் மாமியார் வசந்தாவை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்