என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
- அதே பகுதியை சேர்ந்த 23 வயதுள்ள ஒரு இளம்பெண்ணை பல வருடமாக காதலித்து வந்துள்ளார்.
- வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை ஏமாற்றிய தமிழ்வாணனை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே கீழ கபிஸ்தலம் ஒத்தை தெருவில் வசித்து வருபவர் தமிழ்வாணன் (வயது 29). கார் டிரைவர்.
இவர் அதே பகுதியை சேர்ந்த 23 வயது உள்ள ஒரு இளம் பெண்ணை பல வருடமாக காதலித்து வந்துள்ளார்.
அவரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
பின்னர் ஜாதியை காரணமாக காட்டி அந்த இளம் பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இது குறித்து பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு பூரணி, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பகவதி சரணம், இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை ஏமாற்றிய தமிழ்வாணனை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
தமிழ்வாணனை பொறுப்பு மாஜிஸ்திரேட் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்