என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சியில் நகை வாங்குவது போல் நடித்து திருட்டு
- நகைகளை காட்டும்படி கூறினார். இதையடுத்து உதயகுமார் கடையில் இருந்த தங்க நகைகளை காண்பித்தார்.
- போலீசார் உதயகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அஜயை கைது செய்தனர்.
கோவை:
பொள்ளாச்சியை சேர்ந்தவர் நல்லி கவுண்டர் லே- அவுட் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 31). இவர் அதே பகுதியில் நகை கடை வைத்து நடத்தி வருகினார்.
சம்பவத்தன்று அவரது கடையில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் உதயகுமாரிடம் தங்க நகை வாங்க வேண்டும், நகைகளை காட்டும்படி கூறினார். இதையடுத்து உதயகுமார் கடையில் இருந்த தங்க நகைகளை காண்பித்தார்.
அந்த வாலிபரும் ஒன்றோன்றாக பார்த்தார். அப்போது உதயகுமார் அசந்த நேரம் பார்த்து அந்த வாலிபர் 3 பவுன் தங்க நகை இரண்டை எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உதயகுமார் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களுடன் சேர்ந்து உதயகுமார் அந்த வாலிபரை துரத்தி சென்றார்.
அப்போது அந்த வாலிபர் தவறி கீழே விழுந்தார். உடனே அவரை மடக்கி பிடித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த அஜய் (43) என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் உதயகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அஜயை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்