search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயி வீட்டில் நகை- பணம் திருட்டு
    X

    விவசாயி வீட்டில் நகை- பணம் திருட்டு

    • 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
    • கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சை அருகே உள்ள மேலவெளி ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஞானஅருள் நேசன் (வயது 47).

    விவசாயியான இவர் அவருடைய உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு கோயம்புத்தூருக்கு குடும்பத்தினருடன் சென்று இருந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அவருடைய வீட்டின் ஞான அருள் பேசின் வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் பார்த்து விட்டு அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து வீட்டிற்கு வந்த ஞான அருள் நேசன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது.

    அதிலிருந்து 2 பவுன் தங்க நகையும் மற்றும் 30 ஆயிரம் பணம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

    அது சிறிது தூரம் வரை ஓடி சென்று விட்டு நின்றது.

    தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×