search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • மேகமலை அருவிக்கு விடுமுறை தினத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மேகமலை அருவியில் குவிந்தனர்.
    • வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக தற்போது அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து குளித்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக கம்பம் அருகே சுருளி அருவி மற்றும் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளிட்டவற்றுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் மேகமலை அருவிக்கு எந்த வித தடையும் விதிக்கப்படாத காரணத்தால் விடுமுறை தினத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மேகமலை அருவியில் குவிந்தனர்.

    வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் காணப்பட்டதால் மேகமலை வனத்துறையினர் மற்றும் மயிலாடும்பாறை போலீசார் அருவியில் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    • நேற்று முன்தினம் இரவு சுருளியாறு மின்நிலையம் அருகே உள்ள வாழை த்தோட்ட ங்களுக்குள் யானைகள் புகுந்தது.
    • அங்கிருந்த 1000த்துக்கும் மேற்பட்ட வாழைக்க ன்றுகளை பறித்தும், மிதித்தும் அட்டகாசம் செய்தது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள வெட்டுக்காடு, வண்ணாத்தி ப்பாறை, மாவடி உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு வாழைத்தோட்டங்கள் உள்ளன. இங்கு அடிக்கடி யானைகள் மற்றும் வன விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.

    நேற்று முன்தினம் இரவு சுருளியாறு மின்நிலையம் அருகே உள்ள வாழை த்தோட்ட ங்களுக்குள் யானைகள் புகுந்தது. அங்கிருந்த 1000த்துக்கும் மேற்பட்ட வாழைக்க ன்றுகளை பறித்தும், மிதித்தும் அட்டகாசம் செய்தது. நேற்று காலை தோட்டங்களுக்கு சென்று பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கூடலூர் வனச்சரகர் முரளிதரனுக்கு புகார் தெரிவித்தனர்.

    அதன்பேரில் வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு வந்து சேதம் அடைந்த வாழைத்தோட்ட ங்களின் மதிப்பை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதுபோன்ற சம்பவ ங்களை தடுத்து நிறுத்த யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து விளை நிலங்களுக்குள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குழாய்களை சீரமைத்து கிராமங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • ஆனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறையாத காரணத்தால் குழாய்களை சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கட மலைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட தென்பழனி காலனி, நேருஜிநகர் ஆகிய கிராமங்களுக்கு மூலவைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து குடிநீர் வழங்க ப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கிராமங்களுக்கு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் சேத மடைந்து மண்ணில் புதைந்தது.

    இதனால் கடந்த 3 நாட்களாக இரண்டு கிராம மக்களும் குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். மேலும் குழாய்களை சீரமைத்து கிராமங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறையாத காரணத்தால் குழாய்களை சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதை யடுத்து கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகத்தினர் மாற்று நடவடிக்கையாக கரட்டுப்பட்டி அருகே ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணற்றில் புதிய மின் மோட்டார் மற்றும் குழா ய்கள் அமைத்து இரண்டு கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கினர். இந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திராதங்கம், ஊராட்சி செயலர் சின்னச்சாமி, வார்டு உறுப்பினர் மணி ஆகியோர் பார்வை யிட்டனர். இரண்டு நாட்க ளாக குடிநீர் இல்லாமல் தவித்து வந்த நிலையில் தற்போது ஊராட்சி நிர்வா கத்தின் துரித நடவடிக்கைக்கு கிராம பொதுமக்கள் பாரா ட்டுகளை தெரிவித்தனர்.

    • நேற்று முன்தினம் இரவு தனது கணவரை ஜவுளிக்கடைக்கு துணி எடுக்க தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.
    • அதற்கு அவர் மறுத்துவிட்டு குடி போதையில் வீட்டிலேயே உறங்கி விட்டார்.

    தேனி:

    தேனி அல்லிநகரம் பொம்மையகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). கூலித் தொழிலாளி. இவருக்கும் சங்கீதா (27) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுரேஷ் குடி பழக்கத்துக்கு அடிமையானவர். நேற்று முன்தினம் இரவு தனது கணவரை ஜவுளிக்கடைக்கு துணி எடுக்க தன்னுடன் வருமாறு சங்கீதா அழைத்துள்ளார்.

    அதற்கு சுரேஷ் மறுத்து விட்டார். மேலும் குடி போதையில் வீட்டிலேயே உறங்கி விட்டார். இதனால் சங்கீதா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். போதை தெளிந்து எழுந்த சுரேஷ் மனைவி கோபித்துச் சென்றதால் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    போடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மொக்ைக (53). கூலித் தொழிலாளி. இவ ருக்கு கடந்த சில மாதங்க ளாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியைகடந்த தால் கடந்த 10ந் தேதி முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தின் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
    • அணையில் இருந்து 1000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படு வதால் வைகை ஆற்றங்கரை பகுதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் பெரும்பாலான அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியைகடந்த தால் கடந்த 10ந் தேதி முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தின் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    45 நாட்களுக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்க ப்படும் என அறிவிக்க ப்பட்டது. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்றுவிட்டபோதிலும் வைகை அணையின் நீர்மட்டம் 70.51 அடியாக உள்ளது. வரத்து 1083 கன அடி. திறப்பு 1050 கன அடி. இருப்பு 5960 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படு வதால் வைகை ஆற்றங்கரை பகுதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.70 அடியாக உள்ளது. வரத்து 1053 கன அடி.திறப்பு 105 கன அடி. இருப்பு 4861 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.40 அடி. வரத்து 193 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 423 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடி. வரத்து 156 கன அடி. திறப்பு 156 கன அடி. நீர் இருப்பு 100 மி.கன அடி.

    கன மழை காரணமாக கும்பக்கரை அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று 11-வது நாளாக அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • சம்பவத்தன்று தனது உறவினரை பைக்கில் ஏற்றிக் கொண்டு வைகை அணைச்சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
    • அப்போது ஈரோடு மாவட்டம் முத்தாலம்பாறையைச் சேர்ந்தவர் ஓட்டிவந்த பைக் பயங்கரமாக மோதியது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 33). கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது உறவினரான ஈஸ்வரன், ராகவன் ஆகியோரை ஒரு பைக்கில் ஏற்றிக் கொண்டு வைகை அணைச்சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது ஈரோடு மாவட்டம் முத்தாலம்பாறையைச் சேர்ந்த மணிபாரதி மற்றும் அவரது நண்பர்கள் பிரகாஷ், ராம்பிரசாத் ஆகியோருடன் அந்த பைக் பயங்கரமாக மோதியது. இதில் அசோக்குமார் தடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பைக்கில் வந்த பிரகாஷ், மணிபாரதி, ராம்பிரசாத் ஆகியோர் படுகாயமடை ந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வைகை அணை போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    • தனது மனைவிக்கும், மாரியம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்தவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
    • இவர்களது விஷயம் கணவருக்கு தெரியவரவே அவரை கண்டித்தார். இருந்தபோதும் அவர் தொடர்ந்து மனைவியுடன் பழகி வந்தார்.

    தேனி:

    தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி மாரியம்மன் கோவில்பட்டி மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்குமார் (வயது 38). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மீனாவுக்கும், மாரியம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த தங்கமாயன் மகன் விக்ரம் (28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இவர்களது விஷயம் ஜெகதீஷ்குமாருக்கு தெரியவரவே அவர் விக்ரமை கண்டித்தார். இருந்தபோதும் அவர் தொடர்ந்து மீனாவுடன் பழகி வந்தார்.

    இதனால் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி விக்ரமை ஜெகதீஷ்குமார் அடித்துக் கொலை செய்தார். இந்த வழக்கில் ஜெகதீஷ்குமார் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். திருப்பூரில் இருந்து தீபாவளி விடுமுறைக்காக ஜெகதீஷ்குமார் தேனிக்கு வந்தார். இதை அறிந்ததும் விக்ரமின் சகோதரர் கவுதம் (31) அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

    ஜெகதீஷ்குமார் தனது வீட்டுக்கு பின்புறம் மது குடித்துக் கொண்டு இருந்ததை பார்த்ததும் அங்கு வந்த கவுதம் மற்றும் அவரது நண்பர்கள் மண்வெட்டி, உருட்டுக்கட்டை மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே ஜெகதீஷ்குமார் உயரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து கவுதம் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கல்லூரி செல்லும் பஸ்சை விட்டு விட்டதால் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • ஆண்டிபட்டி சாலையில் உள்ள பெருமாள் கோவில் ஓடை அருகில் சென்ற போது பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

    தேவதானப்பட்டி:

    பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் பள்ளித்தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் ஸ்ரீதர் (வயது 18). இவர் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரி செல்லும் பஸ்சை விட்டு விட்டதால் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆண்டிபட்டி சாலையில் உள்ள பெருமாள் கோவில் ஓடை அருகில் சென்ற போது பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

    இதில் படுகாயமடைந்த ஸ்ரீதர் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சா வளர்ப்பை தமிழக போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் தற்போது கஞ்சா வளர்ப்பு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
    • அதே சமயம் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா வியாபாரிகள் கஞ்சாவை ரயில், பஸ், லாரி, கார், மோட்டார் சைக்கிளில் நூதன முறையில் கடத்தி வந்து கேரளாவிற்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    கம்பம்:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கஞ்சா பயிர் செய்து வந்த நிலையில், கஞ்சா வளர்ப்பை தமிழக போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் தற்போது கஞ்சா வளர்ப்பு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா வியாபாரிகள் கஞ்சாவை ரயில், பஸ், லாரி, கார், மோட்டார் சைக்கிளில் நூதன முறையில் கடத்தி வந்து கேரளாவிற்கு விற்பனை செய்து வருகின்றனர். கேரளாவில் மலைப்பகுதிகள் அதிகம் இருந்தாலும், கேரளா வனம் மற்றும் போலீசார் கெடுபிடியால் கஞ்சா வளர்ப்பு என்பது அதிகமாக இல்லை.

    மேலும் கேரளாவில் போதை பொருட்களான புகையிலை, பான் மசாலா, போதை மாத்திரை உள்ளிட்ட பொருட்கள் 100 சதவீதம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுபாட்டில்கள் விலையும் அதிகம். குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அரசு விற்பனை செய்வதால் பெரும்பாலான இளைஞர்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் கஞ்சாவை போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

    கேரளாவில் இளைஞர்களின் கஞ்சா பயன்பாடு, கஞ்சாவிற்கான கிராக்கியை தெரிந்து கொண்ட தமிழகத்தில் உள்ள கஞ்சா வியாபாரிகள் கேரள இளைஞர்களை குறி வைத்தும் சமூக வலைதளங்களில் இணைந்து கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த தமிழக அரசு தமிழகத்தில் கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டாஸ், சொத்து முடக்கம் என அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதால் கஞ்சா கடத்தலை தவிர்த்து வந்த வியாபாரிகள், மாற்று தொழிலுக்கு மாறியுள்ளனர். அதேசமயம் ஒரு சில வியபாரிகள் தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கம்பம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    கம்பம் 18ம் கால்வாய் பகுதியில் சோதனை மேற்கொண்டபோது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சாக்குபையுடன் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் அதிவேகமாக சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை சினிமா பட பாணியில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் சாக்குபையை சோதனை மேற்கொண்டபோது அதில் 22 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கம்பம் குரங்குமாயன் தெருவைச் சேர்ந்த சதீஸ்வரன் (வயது 26) என்பதும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி கேரளா மாநிலத்தில் விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சதீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தேக்கு, வேம்பு, தோதைகத்தி உள்ளிட்ட விதைகள் அடங்கிய 20 ஆயிரம் விதைப்பந்துகளை தயார் செய்தனர்
    • விதைப்பந்துகளை கடமலைக்குண்டு கிராமத்தை ஒட்டிள்ள மலைப் பகுதிகளில் வீசினர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தேக்கு, வேம்பு, தோதைகத்தி உள்ளிட்ட விதைகள் அடங்கிய 20 ஆயிரம் விதைப்பந்துகளை தயார் செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடமலைக்குண்டு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் நேருராஜன் தலைமையில் மாணவர்கள் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த விதைப்பந்துகளை கடமலைக்குண்டு கிராமத்தை ஒட்டிள்ள மலைப் பகுதிகளில் வீசினர்.

    நேற்று மாலை வரை 20 ஆயிரம் விதைப்பந்துகளும் மலைப்பகுதிகளில் வீசி முடிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் அழகுசிங்கம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மகேந்திரன், ஆசிரியர் செல்வம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.
    • சுருளி அருவி யில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.

    இன்று 9-வது நாளாக நீர்வரத்து சீராகவில்லை. தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவிக்கு செல்ல தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி யில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்றும் அதிக அளவில் வெள்ள ப்பெருக்கு இருந்ததால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். அருவிக்கு வருபவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    • 2023-24ம் ஆண்டு 23வது அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    • 30ம் தேதி மாலை 5.30 மணிவரை மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும்.

    தேனி:

    2023-24ம் ஆண்டு 23வது அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என்று மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கிய குமார் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக தேனி மாவட்டத்தில் செயல்படும் தேனி கூட்டறவு மேலாண்மை நிலையத்தில் 23வது அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி புதிய பாடத்திட்டத்தின் படி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    வருகிற 30ம் தேதி மாலை 5.30 மணிவரை மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். கல்வி சான்றுகளுடன் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×