search icon
என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • மூதாட்டியின் தங்க செயினை மர்ம நபர் பறித்து கொண்டு ஓடிவிட்டார்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர் .

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி அழகாப்பட்டி சாலையில் திருமால் நகரை சேர்ந்தவர் குழந்தை தெரசா( வயது 78).

    இவர் வீட்டை பூட்டி விட்டு, தனது மகளின் மாமியார் இறந்ததற்கான தேவை காரியத்திற்காக துணி எடுத்து விட்டு மகள் வீட்டிற்கு சென்று விட்டு நள்ளிரவு 1.45 மணிக்கு வீடு திரும்பி உள்ளார்.

    அப்போது முன்பக்க கதவு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

    அப்போது உள்ளே மறைந்திருந்த மர்ம நபர் குழந்தை தெரசா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயின்களை பறித்து கொண்டு ஓடிவிட்டார்.

    சம்பவம் குறித்து குழந்தை தெரசா 100 எண்ணிற்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நள்ளிரவு சுமார் 2.30 மணி அளவில் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைத்து தடயவியல் ஆய்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழந்தை தெரசா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர் .

    முசிறியில் பூட்டிய வீடுகளை மர்ம நபர்கள் கண்காணித்து திருடி வருவது முசிறி பகுதி பொது மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது.
    • 700.400 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    திருச்சி

    திருச்சி விமான நிலை யத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் , இலங்கை, அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் தங்கம் பல்வேறு முறைகளில் மறைத்து கடத்தி வரும் பயணிகளிடமிருந்து தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் இருக்கை ஒன்றில் பார்சல் இருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த விமான நிறுவன ஊழியர்கள் உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக விமானத்தில் ஏறி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது இருக்கையின் அடியில் மறைத்து 6 பார்களாக எடுத்து வரப்பட்ட 700.400 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.47.50 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அந்த இருக்கையில் அமர்ந்து வந்த பயணியின் ஆவணங்களை சோதனை செய்தபோது அந்த பயணி விமான நிலைய வளாகத்திற்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் தான் கொண்டு வந்த தங்கத்தை இருக்கையில் வைத்து விட்டு வந்ததாக தெரிவித்ததை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

    தமிழகத்தில் நிலவி வரும் படுகொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கண்டித்தும், மின் கட்டண உயர்வைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தால், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

    இந்நிலையில், சீமானின் பேச்சுக்கு, திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் பொதுக்கூட்டம் ஒன்றில் சீமான், காவல்துறை பொறுப்பு வகிக்கும் பதவிகளை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில், இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட எஸ்.பி., தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் மூலமாக சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். சீமானின் பொய்யான அபிப்பிராயங்களுக்கு நீதிமன்றங்கள் மூலம் வழக்கு தொடர்வேன்.

    பொது மேடையில் பேசினாலும், கொச்சையான பொய்களை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.
    • ஆற்றில் இறங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    திருச்சி:

    தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அந்த வகையில் ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.

    இதற்காக 500-க்கும் மே ற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்தனர். மேலும் காவிரியில் தற்போது தண்ணீர் இருகரைகளையும் தொட்டு கரைபுரண்டு செல்வதால் ஆற்றில் இறங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

     தர்ப்பணம் கொடுப்பவர்கள் அனைவரும் மண்டப கரைகளில் அமரவைக்கப் பட்டனர். இதில் ஒரு சில இடங்களில் 10 முதல் 30-க்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் வரிசையாக அமர வைத்து அவர்களது மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர்.

    பின்னர் பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிண்டமாக பிடித்து மந்திரங்கள் ஓதிய பின் அவற்றை ஆற்றில் கரைத்து தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்ட னர்.

    திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    காவிரி கரைகளில் திதி கொடுக்கும் இடங்களில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். இதனால், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் நள்ளிரவு முதலே தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் வருகை தந்ததால், அப்பகுதியில் எந்த விதமான அசம்பா விதமும் ஏற்படாமல் இருக்க, போக்குவரத்து மாற்றம் செய்யபட்டு இருந்தது.

    மேலும், இருசக்கர வாகனம் மட்டுமே அம்மா மண்டபம் வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது. கார், வேன், ஆட்டோ போன்ற எந்த வாகனங்களையும் அம்மா மண்டபம் அருகே செல்ல அனுமதிக்கவில்லை. குறிப்பாக, சாலையில் முழுவதும் காவல்துறையினர் சி.சி.டி.வி. கேமரா அமைத்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    குறிப்பாக, ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து பொதும க்களுக்கு அறிவு ரைகளும், விழிப்புணர்வும் ஏற்படுத்தபட்டு வருகிறது.

    காவிரியாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பக்தர்கள் அம்மா மண்டபத்தில் அமைக் கப்பட் டிருந்த தொட்டிகளில் நிரப்பப்பட்ட தண்ணீரில் புனித நீராடினர். மற்றொரு புறம் தடுப்புக்கட்டைகள் கட்டி அதில் நீராட அனுமதிக்க ப்பட்டனர்.

    தர்ப்பணம் கொடுத்தவர் கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கினர். இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு திரளான பக்தர்கள் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலா ண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

    கரூர் மாவட்ட காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் நெரூர், மாயனூர், வாங்கல் உள்ளிட்ட ஆற்றங்கரையில் பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அப்போது அங்கு வந்த பலரும் தங்களது மூன்று தலை முறை முன்னோ ர்களின் பெயரை கூறி தர்ப்பணம் செய்தனர்.

    அதன்பின்பு அவர்கள் பூஜை செய்து பிண்டங்களை காவிரி ஆற்றில் விட்டு முன்னோர்களை வணங்கி சென்றனர். பின்னர் அவர்களின் வீடுகளுக்கு வந்ததும் முன்னோர்களின் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழங்கள் உள்ளிட்டவற்றை படையல் இட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். 

    • நீர்நாய்களில் மொத்தம் 13 சிற்றினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • அழிந்து வரும் விலங்கினமான நீர்நாய்களை பாதுகாக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

    நீர்நாய்... இது நீரில் வாழ்வதற்கேற்ற தகவமைப்பு கொண்ட ஒரு வகையான பாலூட்டி இனமாகும். இவை பாதிநேரம் கரையிலும், பாதி நேரம் நீரிலும் வாழ்வதால், பாதி நீர்வாழ் பாலூட்டிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

    விலங்குகள் வரிசையில் பட்டியலிடப்பட்டாலும் இவை மீன்கள், இறால், நண்டு, நத்தை போன்றவற்றையே இரையாக கொள்கின்றன. இரைகளை பிடித்த பிறகு நீர் அல்லது நிலத்துக்கு எடுத்துச்சென்று உண்கின்றன. இவை நீர்நிலைகளில் ஆழம் குறைவாக உள்ள பகுதிகளில் சுலபமாக இரை தேடுகின்றன.

    நீர்நாய்களில் மொத்தம் 13 சிற்றினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மெலிந்தோ அல்லது சற்றே பருமனுடனோ, நீண்ட உடல்வாகினை பெற்றுள்ள நீர்நாய்கள் தண்ணீரில் செல்வதற்கு ஏதுவாக பாதங்களில் சவ்வுகளையும், வேட்டையாடுவதற்கு ஏற்ப கூர்மையான பற்களையும் கொண்டுள்ளது. 2 முதல் 6 அடி உயரம் வரையிலான நீர்நாய்கள் 45 கிலோ எடை வரை வளரக்கூடியதாகும். சுமார் 16 ஆண்டுகள் வரை வாழும்.

    நல்ல தண்ணீரை மட்டுமே தனது வாழ்விடமாக கொண்ட நீர்நாய்கள், சதுப்புநிலம், ஈர நிலம், ஆறு, குளம் மற்றும் நெல்வயல்களில் அதிகளவில் காணப்படுகின்றன. நீர்நிலைகளின் மாசுபாடு காரணமாக சிங்கப்பூர், கம்போடியா, பூட்டான் உள்ளிட்ட நாடுகளில் முற்றிலும் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சிமலையையொட்டிய ஆற்றுப்படுகைகள் மற்றும் கரூரில் இருந்து திருச்சி வழியாக டெல்டாவிற்கு பாயும் காவிரி ஆற்றுப்படுகைகளிலும் தற்போது அதிகளவில் நீர்நாய்கள் வசித்து வருகின்றன.

    அழிந்து வரும் விலங்கினமான நீர்நாய்களை பாதுகாக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் சுற்றுலாத்தலமான முக்கொம்பு மற்றும் அதனை சுற்றியுள்ள காவிரி ஆற்றுப்பகுதிகளில் தற்போது அதிகளவில் நீர்நாய்கள் வசிக்கின்றன. முக்கொம்புக்கு சுற்றுலா செல்பவர்களும், காவிரி ஆற்றுப்படுகைகளுக்கு செல்பவர்களும் நீர்நாய்கள் கூட்டம், கூட்டமாக தண்ணீரில் நீந்தி செல்வதை காணலாம்.

    ஆற்றில் வளர்ந்து நிற்கும் கோரைப்புற்களுக்கு நடுவில் மறைவிடமான பகுதியில் நீர்நாய்கள் பதுங்கி கொண்டு தன்னையும், தன் குட்டிகளையும் பாதுகாக்கிறது. மேலும் அதனை பாதுகாப்பு அரணாக கொண்டு, அங்கிருந்தவாறே மீன்களை பிடித்து உணவாக்கி கொள்கிறது. குறிப்பாக மாலை பொழுதுகளில் காவிரி ஆற்றின் மணற்பாங்கான இடங்களில் நீர்நாய்கள் உருண்டு, புரண்டு விளையாடும் காட்சி பொதுமக்களை கவர்ந்து இழுக்கிறது. நீர்நாய்கள் துள்ளி குதித்து விளையாடுவதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து வருகிறார்கள்.

    • கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, அந்த மின் கோபுரத்தின் அடிப்பகுதி அரித்துச் செல்லப்பட்டது.
    • கொள்ளிடம் ஆற்றில் உள்ள மின் கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

    ஸ்ரீரங்கம்:

    திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே, ஆற்றுப்பகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் ராட்சத கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, அந்த மின் கோபுரத்தின் அடிப்பகுதி அரித்துச் செல்லப்பட்டது.

    எப்போது வேண்டுமானாலும் அந்த மின்கோபுரம் சாய்ந்து விழும் அபாய நிலையில் இருந்ததால் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மின் கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பின்னர் மாற்று வழியில் மின்சாரம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று இரவு ஆற்றுப்பகுதியில் உள்ள மின் கோபுரத்தின் அடிப்பகுதி முழுவதுமாக அரித்து செல்லப்பட்டதால் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் ராட்சத கோபுரம் சாய்ந்து ஆற்றில் விழுந்தது.

    மின் கோபுரம் இரவில் சாய்ந்ததாலும், மின்சாரம் நிறுத்தப்பட்டு இருந்ததாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. 

    • கலெக்டர் அலுவலகங்களில் மனு கொடுக்க திட்டம்.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் காவல்.

    திருச்சி:

    திருச்சியில் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டனர். அதற்காக அவர்கள் இன்று அய்யாக்கண்ணுவின் இல்லத்தில் இருந்து திரண்டு புறப்பட தயாராகியுள்ளனர்.

    இந்த நிலையில், திருச்சி மாநகர போலீசார் அங்கு வந்து அவர்களை வெளியில் செல்ல முடியாதவாறு வீட்டு காவலில் அடைத்து சிறை வைத்தனர். மேலும் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுன்னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடிசெய்யவேண்டும், வேளாண் உற்பத்திற்கு 2 மடங்கு லாபம் கொடுக்க வேண்டும், மரபணு மாற்று விதையை அனுமதிக்கக்கூடாது, எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

    இன்று தமிழகம் முழுவதும் விவசாயிகள் கலெக்டர் அலுவலகங்களில் மனு கொடுக்க திட்டமிட்டனர். மற்ற மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திருச்சியில் மட்டும் எங்களை போலீசார் வீட்டுக்காவலில் சிறை வைத்தது வேதனையாக உள்ளது' என்றார். 

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.
    • கம்பரசம்பேட்டை அருகே உள்ள பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார்.

    பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.

    திருச்சி ஸ்ரீரங்கம் அல்லூர் பாரதி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    பள்ளி மாவணர்களுடன் அமர்ந்து காலை உணவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாப்பிட்டார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

    முன்னதாக, கம்பரசம்பேட்டை அருகே உள்ள பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • மாணவர் ஒருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது, தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    12ம் வகுப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறை தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தததை அடுத்து, ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த மோதலால், மாணவர் ஒருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும்.
    • விஜய் என்னை அழைத்தால் நிச்சயம் செல்வேன்.

    தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகராக வலம் வருபவர் அமீர். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமீர், விஜய் அழைத்தால் நிச்சயம் அவரது கட்சிக்கு செல்வேன் என்று பதில் அளித்துள்ளார்.

    திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "கிராமங்கள் என்பது இந்தியாவின் முதுகெலும்பு. திரைத்துறையில் கிராமங்களை தவிர்த்துவிட்டு எந்த படத்தையும் எடுக்க முடியாது. அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும்."

    "நான் அரசியலுக்கு வந்தாலும் வரலாம். எனது உள் உணர்வு அதைத் தொன் சொல்கிறது. விஜய் என்னை அழைத்தால் நிச்சயம் செல்வேன். என்னை பொறுத்தவரை விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளது."

    "மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக தமிழகத்தை புறக்கணித்ததை சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரித்தது வேதனை அளிக்கிறது. அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு சமமாக பார்க்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் அமைச்சர் பதவி வழங்கினால் எனக்கு மகிழ்ச்சி."

    "சட்டம் ஒழுங்கு மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் சரியாக தான் உள்ளது. ஆளும் கட்சியை எதிர்த்து அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கை பற்றி மட்டுமே கூற முடியும்," என்றார். 

    • மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை.
    • பெண் பயணியை கைது செய்து தொடர்ந்து விசாரணை.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து, மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற ஏர் ஏசியா விமான பய ணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு பெண் பயணியின் உடமையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பார்சல் ஒன்று இருந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த அந்த பார்சலை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    சுங்கத்து றை அதிகாரிகள் அதனை சோதனை செய்தபோது அதில் 8000 அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 5.63 லட்சம் என தெரிய வருகிறது.

    அதற்கான உரிய ஆவணங்கள் அந்த பெண்ணிடம் இல்லை என்பதால் அமெரிக்க டாலரை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பெண் பயணியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதே போன்று சிங்கப்பூ ருக்கு சென்ற ஸ்கூட் விமான பயணிகளின் உடமை களை சோதனை செய்தபோது பயணி ஒருவர் சிங்கப்பூருக்கு கடத்த இருந்த ரூபாய் 10.33 லட்சம் மதிப்பிலான அமெரிக்க எண் மற்றும் யூரோ பறிமுதல் செய்யப்பட்டது.

    சுங்கத்து றை அதிகாரிகள் அவரை கைது செய்து தொடர்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் அதிக அளவில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • முனியப்பன் விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
    • லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியப்பன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    திருச்சி:

    திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்த முனியப்பன் (வயது 59) இவர் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடந்த மாதம் வாங்கியுள்ளார்.

    அந்த மனையினை உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 11.7.2024 அன்று விண்ணப்பித்துள்ளார். முனியப்பன் விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

    இதனால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முனியப்பன் விசாரித்த பொழுது தனது மனையை உட்பிரிவு செய்து கொடுக்க கொட்டப்பட்டு பகுதிக்கான சர்வேயர் முருகேசன் (வயது 39) என்பவரை பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு முருகேசனிடம் பேசி உள்ளார்.

    இதையடுத்து மனையை உட்பிரிவு செய்து கொடுக்க சர்வேயர் முருகேசன் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு முனியப்பன் லஞ்சப் பணத்தை குறைத்து கொள்ள வேண்டுமாறு முருகேசனிடம் கெஞ்சி கேட்டதன் பேரில் முருகேசன் 5 ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டு ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் உனக்கு உட்பிரிவு செய்து தர முடியும் என்று கட்டாயமாக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியப்பன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேசன், பாலமுருகன் மற்றும் குழுவினருடன் முனியப்பனிடம் இருந்து சர்வேயர் முருகேசன் பத்தாயிரம் ரூபாய் லஞ்ச பணம் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

    தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

    ×