search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்காட்டுப்பள்ளியில் வாழைத்தார் விற்பனை மும்முரம்
    X

    வாழைத்தார் ஏல மையத்தில் குவிந்த வாழைத்தார்.

    திருக்காட்டுப்பள்ளியில் வாழைத்தார் விற்பனை மும்முரம்

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருக்காட்டுப்பள்ளி பகுதியில் செங்கரும்பு மற்றும் வாழை பயிரிடப்பட்டு உள்ளது.
    • திருக்காட்டுப்பள்ளி பகுதியை சுற்றியுள்ள வாழை விவசாயிகள் விளைவித்த பூவன், பச்சைநாடன், ரஸ்தாலி ஆகிய ரகங்களை விற்பனை செய்தனர்.

    பூதலூர்:

    பொங்கல் பண்டி கையை முன்னிட்டு திருக்காட்டுப்பள்ளி பகுதியில் காவிரி பாசன பகுதிகளில் ஏராளமான பரப்பில் செங்கரும்பு மற்றும் வாழை பயிரிடப்பட்டு உள்ளது.

    பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக அரசு கொள்முதல் செய்தது போக எஞ்சியுள்ள கரும்புகளை விவசாயிகள் பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    அதேபோல திருக்காட்டுப்பள்ளி பகுதியை சுற்றியுள்ள வாழை விவசாயிகள் தங்கள் விளைவித்த பூவன், பச்சைநாடன், ரஸ்தாலி ஆகிய ரகங்களை திருக்காட்டுப்பள்ளியில் உள்ள வாழ ஏலமையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    நேற்று திருக்காட்டுப்பள்ளி வாழை ஏலமையத்திற்கு ஏராளமான பூவன், ரஸ்தாலி தார்கள் வந்திருந்தன.

    பச்சைநாடன் சற்று குறைவாகவே வந்திருந்தது.

    விற்பனைக்கு வந்து இருந்த தார்கள்விவசாயிகளுக்கு கட்டுப்படியான அளவிலேயே ஏலம் போனதாக தெரிவித்தார்.

    அதேபோல மஞ்சள் கொத்து விற்பனையும் செங்கரும்பு விற்பனையும் மெதுவாக சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    இன்னும் ஓரிரு நாட்களில் மஞ்சள் கொத்து, செங்கரும்பு, மற்றும் வாழை விற்பனை முழு வீட்டில் இருக்கும் என்று எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    Next Story
    ×