search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • திருப்பத்தூர் கலெக்டர் தகவல்
    • 22 விருதுகள் வழங்கப் பட உள்ளது

    திருப்பத்தூர்:

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்க ளுக்கு மாநில விருதுகள் முதல்-அமைச்சரால் டிசம்பர் மாதம் 3-ந் தேதி வழங்கப்பட உள் ளது.

    இதில் சிறந்த பணியாளர், சுயதொழில் புரிபவர், சிறந்த ஆசிரியர், சிறந்த சமூக பணி யாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறவனம், மாற்றுத் திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த் திய சிறந்த நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரி யர், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட் டுனர் மற்றும் நடத்துனர், பொதுக்கட்டிடங்களில் மாற் றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு, தனியார் நிறுவனங்கள் உள் ளிட்ட 22 விருதுகள் வழங்கப் பட உள்ளது.

    இதற்கு இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக் கம் செய்து வருகிற 25-ந்தேதிக் குள் மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ வழங்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை திருப் பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரி வித்துள்ளார்.

    • இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம்
    • பொதுமக்கள் கலெக்டரிடம் புகார்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சியில் 14-வது வார்டு மும்தாஜ் கார்டன் பகுதியில் சாலைகள் மிகவும் சேதம் அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் பூசாராணியிடம் மனு அளித்தனர்.

    அதன்பேரில் மூலதன மானியத்திட்டத்தின் கீழ் சுமார் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க முடிவு செய்யப் பட்டது. அதன் பின்னர் ஒப்பந்ததாரர் மூலம் தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கப்பட்டது. அப்போது சாலை யின் நடுவே இருந்த மின்கம்பத்தை அகற்றாமல் மின்கம்பத்து டன் சேர்த்து தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு இடை யூறாக உள்ளதாகவும் விபத்து ஏற்படுவதாகவும், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.

    • 7 வாகனங்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பைக் திருட்டு சம்பந்தமாக போலீசருக்கு புகார்கள் வந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் ஆந்திர மாநிலம் அர்மணிபெண்டா பகுதியை சேர்ந்த திருமலை (வயது 26) என்பவர் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 7 பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் நடவடிக்கை
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட உள்ளது.

    இதற்கு பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தேயிலை, முன்னாள் தேயிலை தோட்ட பழங்குடியினர், வனவாசிகள், தீவுகள், நதி தீவுகளில் வசிக்கும் மக்கள், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (கிராமின்), அந்தியோதயா அன்ன யோஜனா ஆகிய திட்டபயனாளிகள், எஸ்.இ.சி.சி. (சமூக பொருளாதார சாதி வாரிகணக் கெடுப்பு -2011) குடும்பத்தினர்கள், 14 அம்ச திட்டத்தின் படி பட்டியலிடப்பட்ட ஏழை குடும்பத்தினர் ஆகியவற்றில் எல். பி.ஜி. இணைப்பு இல்லாத ஏழை குடும்பத்தை சேர்ந்தபெண் கள் https://www.pmuy.gov.in என்ற இணையதளத்திலோ, எரிவாயு முகவர்களை அணுகியோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • வசந்தாவும், சாவித்திரியும் ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்தில் இருந்து 2-வது பிளாட்பாரத்திற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
    • விபத்து குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வலையாம்பட்டு ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் வசந்தா (வயது 67). இவரது மகன் பிரகாஷ். வசந்தாவின் சகோதரி ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பழைய காலணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாவித்திரி (வயது 66).

    இவர்கள் 3 பேரும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆம்பூர் ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்தனர்.

    ரெயில் நிலையத்தில் டிக்கெட் வாங்க பிரகாஷ் கவுண்ட்டருக்கு சென்றார்.

    அப்போது வசந்தாவும், சாவித்திரியும் ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்தில் இருந்து 2-வது பிளாட்பாரத்திற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அக்காள், தங்கை மீது மோதியது. இதில் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசந்தா, சாவித்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய் மற்றும் சித்தி ரெயிலில் அடிப்பட்டு இறந்ததை பார்த்து பிரகாஷ் கதறி அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்த பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • ஆலங்காயத்தில் 3 நாட்கள் நடக்கிறது
    • போலீஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவிப்பு

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் சுற்றுவட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலை ஆக்கிரமிப்புகள் வரும் நவம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை அகற்ற படுவதாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கே.கே.ஞானசேகரன் அந்தந்த போலீஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிவிப்பில் வாணியம்பாடி நெடுஞ்சாலை உட்கோட்டம் அப்துல்லாபுரம் முதல் ஆசனாம்பட்டு, ஆலங்காயம் திருப்பத்தூர் சாலை, ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முதல் ராஜபாளையம் கூட்ரோடு வரை, ஜமுனாமரத்தூர் ஆலங்காயம், வாணியம்பாடி சாலை, ஆலங்காயம் காலணி முதல் மார்கெட் சந்திப்பு சாலை வரை உள்ள ஜமுனாமரத்தூர் சாலை, பஸ் நிலையம் முதல் பைக் ேஷாரூம் வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது.

    அவ்வாறு ஆக்கிரமிப்பு களை அகற்றும் போது ஆக்கிரமிப்புகளை அகற்ற முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

    • பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம்
    • அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 45). தனியார் ஷூ கம்பெனி பஸ் டிரைவர். இவர் இன்று அதிகாலை வேலைக்கு ஆட்களை ஏற்றுவதற்காக ஆம்பூர் டவுன் சான்றோர் குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார்.

    பெண்கள் உட்பட ஷூ கம்பெனி தொழிலாளர்கள் சிலர் பஸ்சில் ஏறிக்கொண்டிருந்தனர்.

    பெங்களூரில் இருந்து சென்னைக்கு கூரியர் ஏற்றி செல்லும் பார்சல் கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென தொழிலாளர்களை ஏற்றி கொண்டிருந்த பஸ் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பெண்கள் உட்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 31-ந்தேதி கடைசி நாள்
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள், பொது த்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு விளையாட்டு போட்டிகளில் 1.1.2018 அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானவையாக கருதப்படும். சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இதற்கு தகுதியானவர்கள்.

    இணையதளத்தில் விண்ணப்பம்

    40 வயதுக்குட்பட்ட வர்கள் மட்டுமே இத்திட்டத்தின்கீழ் பயன்பெற இயலும். விண்ணப்பதாரர் வேலைவாய்ப்பு பெற்றிடுவதற்கான இதர முழு தகுதிகளும் பெற்றிருத்தல் வேண்டும். தமிழ்நாட்டினை சார்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 3 சதவித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறு வதற்கான விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து இணையதள முகவரி மூலமாகவோ அல்லது நேரு விளையாட்டு அரங்கில் இயங்கிவரும் தலைமை அலுவலகத்தில் நேரிலோ விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இடம் சம்மந்தமாக 2 பேருக்கும் இடையே தகராறு
    • வழக்கு பதிவு செய்து விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55), முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் (55) என்பவருக்கும் இடையே இடம் சம்மந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கோவிந்தராஜ் மற்றும் அவரது உறவினர்களான ராஜா (60), இவரது மனைவி நிவேஸ்குமாரி (45), கோகுல் ஆகியோர் சேர்ந்து, ஆறுமுகத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து ஆறுமுகம் கந்திலி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கோவிந்தராஜ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 நாட்களாக நடைபெற்றது
    • ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார அளவிலான தமிழக அரசின் கலைத்திருவிழா போட்டிகள் வட்டாரக் கல்வி அலுவலர் சி.சித்ரா தலைமையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த 18-ந் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்களாக நடைபெற்றது.

    பள்ளியின் தலைமையாசிரியர் மகேஷ் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி எம்.எல். ஏ கோ. செந்தில்குமார் கலந்து கொண்டார்.

    இந்த போட்டிகளில் மாணவ மாணவியர்களால் இசைக்கருவிகள் வாசிப்பு, சிலம்பாட்டம், பறையாட்டம் கரகாட்டம், தெருக்கூத்து, உள்ளிட்ட ஏராளமான போட்டிகள் நடைபெற்றது.

    இதில் அதிமுக பேரூராட்சி செயலாளர் சிவகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாண்டியன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் கலைநிக ழ்ச்சிகளை கண்டுகளித்தனர். முடிவில் ஆசிரியர் இராமு நன்றி கூறினார்.

    • பொதுமக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
    • மின்இணைப்புகளை துண்டித்த பின்பு, கடை மூட வேண்டும்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் தொழிற்சாலைகள் தீத்த டுப்பு கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் அதிகாரிகள், பட்டாசு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    திருப்பத்தூரில் 30 பட்டாசு கடைகள், நாட்றம்பள்ளியில் 15, வாணியம்பாடியில் 16 மற்றும் ஆம்பூரில் 4 என மொத்தம் 65 பட்டாசுகடைகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த பட்டாசு கடைகளில் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பட்டாசு கடை உரிமம் வழங்கப்பட்ட கடையில் இதர பொருட்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது.

    வெடி பொருட்கள், மத்தாப்பு வகை பட்டாசுகளை குறிப்பிட்ட அளவிற்கு மிகாமல் இருப்பு வைத்து விற்பனை செய்யக்கூடாது. தண்ணீர் மற்றும் மணல் வாளிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    கடையின் அருகே பட்டாசு வெடிக்க அனுமதித்தல், சிறுவர்களின் பொறுப்பில் பட்டாசு விற்க அனுமதித்தல் ஆகியவை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

    மேலும் பட்டாசு கடைக்குள் அல்லது அருகில் திறந்த விளக்குகள், மெழுகுவர்த்தி, தீக்குச்சி மற்றும் தீப்பொறி ஏற்படுத்தும் மின் சாதனங்களை பயன்படுத்தக்கூடாது.

    திருமண மண்டபங்களில் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது. விற்பனை முடிந்ததும் கடையை மூடும் முன் மின்இணைப்புகளை துண்டித்த பின்பு, கடை மூட வேண்டும். விழிப்புணர்வு விளம்பரங்கள் மற்றும் பதாகைகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பொது மக்களின் உயிர் அச்சுருத்தல் இன்றி கடைகள் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தேவராஜி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க. முகவர்களின் (பூத் கமிட்டி) ஆலோசனை கூட்டம் நேற்று வாணியம்பாடி நியு டவுன் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன் முன்னிலை வகித்தனர். நகர தி.மு.க. செயலாளர் சாரதிகுமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் தேவராஜி எ.எல்.ஏ., வாணியம்பாடி தொகுதி பார்வையாளர் டி.செங்குட்டுவன் மற்றும் திமுக நிர்வாகிகள் முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ்.ஞானவேலன்(ஆலங்காயம் மேற்கு), எஸ்.தாமோதிரன் (ஆலங்காயம் கிழக்கு), கே.ஆர்.திருப்பதி(திருப்பத்தூர் கிழக்கு), டி.சாமுடி (நாட்றம்பள்ளி கிழக்கு), உதயேந்திரம் பேரூர் செயலாளர் ஆ.செல்வராஜ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மாவட்ட விவசாயி அணி அமைப்பாளர் பூ.சதாசிவம், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×