search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • மாணவர்களிடையே எதிர்கால வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து அறிவுரை
    • அதிகாரிகள் உடனிருந்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்கு சாவடி மையத்தில் மாதிரி வாக்கு சாவடி மையம் அமைத்து விழிப்புனர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி கலந்து கொண்டு பள்ளி மாணவர்களிடையே எதிர்கால வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுரைகள் வழங்கினர்.

    இதனை தொடர்ந்து திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பானுமதி படிவம் 6 மற்றும் 7 இன் முக்கியத்துவம் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், தேர்தல் பணி வட்டாட்சியர் மண்டல துணை வட்டாட்சியர் நடராஜன், வருவாய் ஆய்வாளர்கள் அன்னலட்சுமி, வனிதா கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உள்பட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விதை மையம்
    • கேழ்வரகு விதை, கொள்ளு, மா மற்றும் எலுமிச்சை செடி

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விதை மையம் சார்பில் பழங்குடியின விவசாயிகள் நலத்திட்ட மூலம் விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி மற்றும் அரிவாள், களைக்கொத்து, கேழ்வரகு விதை, கொள்ளு, மா மற்றும் எலுமிச்சை செடி உள்ளிட்ட விவசாய இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றி 100 விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கினார்.

    • கலெக்டர் தகவல்
    • இ-சேவை மையம் மூலம் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்பும் நபர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து, ஆவணங்களை இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    அதாவது, பட்டாசு கடை வைக்க விரும்பும் நபர்கள் பாஸ்போர்ட் போட்டோ ஆதார் அட்டை, உரிம கட்டணம் ரூ.500 (அரசு கருவூலத்தில் செலுத்தும் சீட்டு மூலம்), பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்த கட்டிடமாக இருந்தால் மனுதாரர் பெயரில் உள்ள பட்டா, வாடகை கட்டிடமாக இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டிட அமைவிட வரைபடம் அல்லது கட்டிட திட்ட அனுமதி (ஏ4 அளவில்), விண்ணப்பங்களை வரும் 24-ந் தேதி வரை மட்டுமே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    அதன் பிறகு பெறப்படும். விண்ணப்பங்கள் எந்த காரணத்தை கொண்டும் ஏற்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வாணியம்பாடியில் லியோ திரைப்படம் வெளியானது
    • போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள சிவாஜி சினிமாஸ் 3 தியேட்டர்களில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வெளியிடப்பட்டது.

    இந்த சிவாஜி தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் மேள தாளங்களுடன் உற்சாகமாக நடனமாடினர். மேலும் ஒரே வளாகத்தில் 3 தியேட்டர்கள் உள்ளதால் விஜய் ரசிகர்கள் அதிகாலை முதல் ஏராளமானோர் குவிந்தனர்.

    அப்போது விஜய் ரசிகர்கள் திரையரங்கு ஊழியர்கள் மற்றும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப ட்டனர். மேலும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    அப்போது ஒரு ரசிகர் பல் துவக்கும் பிரஷ் கையில் எடுத்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    திரைப்படம் வெளியா னதும் விஜய் என்ட்றி கொடுக்கும் காட்சிகள் வந்த போது விஜய் ரசிகர்கள் செல்போன் வெளிச்சம் காட்டி உற்சாகமாக நடனமாடி திரைப்படத்தை வரவேற்றனர்.

    மேலும் வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர். கூட்டம் அதிகமாக காணப்ப ட்டதால் அதிக அளவில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? பரிசோதனை செய்வது சட்டப்படி குற்றமாகும்
    • திருப்பத்தூர் கலெக்டர் எச்சரிக்கை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சின்னாரம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் ரூ. 29.4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். திருப்பத்தூர் எம்.எல்.ஏ., நல்லதம்பி, ஒன்றிய குழு தலைவர் திருமதி, ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநர் செல்வ ராசு, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்ட த்தை பொறுத்தவரையில் பாலின வித்தியாசம் அதிக அளவில் உள்ளது. இந்த வித்தியாசம் ஏற்பட்டதற்கு காரணம் சில நபர்கள் பெண் குழந்தையை வேண்டாம் என நினைக்கிறார்கள்.

    கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? பரிசோதனை செய்வது சட்டப்படி குற்றமாகும். யாராவது பரிசோதனை செய்வது தெரிய வந்தால், அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்படும்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை அறவே தவிர்க்க வேண்டும். உறவுகளுக்குள் திரும ணத்தையும் தவிர்க்க வேண்டும். குழந்தை திருமணத்தில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்களோ, யாரை வைத்து திரு மணத்தை நடத்துகிறீர்களோ அவர்கள் அனைவருக்கும் சட்டப்படி தண்டனை வழங்கப்படும்.

    குழந்தை திருமணத்தில் அவர்களது வீட்டுக்கு சென்று வந்தால், அவர்களது வீட்டில் உணவு அருந்தினால், மொய் மட்டும் வைத்து விட்டு வந்தேன் என்றாலும் தண்டனை உண்டு.

    ஆகவே, குழந்தை திருமணத்தில் கலந்து கொள்வதும் குழந்தை திருமணத்தை சொல்லாமல் இருப்பதும் சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 40), விவசாயி. இவர் கடந்த 17-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, நிலத்தில் வேலை செய்ய சென்றார்.

    மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. இதில் மர்ம நபர்கள் யாரோ வீடு புகுந்து 8 பவுன் நகை, பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

    இது குறித்து பன்னீர்செல்வம் ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற, பன்னீர்செல்வம் பக்கத்து வீட்டை சேர்ந்த சந்துரு என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த, மனோஜ்குமார் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.

    இது குறித்து உமாரபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலை ஓர பாறை மீது வேன் மோதி 2 பேர் காயம்
    • போலீசார் அப்புறப்படுத்தினர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை, அத்தனாவூர் பகுதியில் உழவர்கள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க நிறுவனம் உள்ளது.

    இங்கிருந்து 50 கிலோ விதம் 40 மூட்டை சாமையை கொள்முதல் செய்து திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு கொண்டு செல்ல வேனில் ஏற்றிக்கொண்டு மதியம் ஏலகிரி மலையில் இருந்து வந்து கொண்டிருந்தது.

    ஏலகிரி மலையில் உள்ள 5-வது வளைவு சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரெனவேன் பிரேக் பிடிக்கவில்லை. வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் திருவண்ணா மலை மாவட்டம் பெரும்பா க்கம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் திருமலை (28) என்பவர் சாலையின் அருகே உள்ள பாறை மீது மோதி சாதுரியமாக வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

    இதனால் திருமலை மற்றும் கிளினராக இருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் ராமு (31) ஆகிய இருவரும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஏலகிரி மலை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலைகளில் போக்குவரத்து பாதிப்பின்றி விபத்துக்குள்ளான வேனை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரு நாளைக்கு 5 காட்சிகள் மட்டுமே நடத்திட அரசு ஆணை
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் லியோ திரை ப்படத்தினை திரையிடும் திரையரங்குகளில் நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை கூடுதலாக சிறப்புக் காட்சி (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்திடவும், தொடக்க காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்கும் முடிவடையும் வகையில் திரையிடுமாறு அரசு ஆணைகள் வெளியிட்டுள்ளன.

    மேற்காணும் விதிமுறைகளை பின்பற்றவும், ஏதேனும் புகார்கள் இருப்பின் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டு அறை (04179-222211) மற்றும் காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு (04179-221103) தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்
    • 60 அடி ஆழத்தில் இறங்கி உடலை மீட்டனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த வெப்பாளம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 50).கட்டிடம் மேஸ்திரி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

    முதல் மனைவிக்கு ஒரு மகன், மகளும், 2-வது மனைவிக்கு 2 மகள்களும் உள்ளனர்.

    முதல் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கடந்த 15-ந் தேதி வெளியே சென்று வருவதாக குடும்பத்தினரிடம் செல்வம் கூறிவிட்டு சென்றார்.

    இன்று காலை அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் கிணற்றின் அருகே சென்று பார்த்தனர். அப்போது செல்வம் பிணமாக மிதந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வாணியம்பாடி தாலுகா போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி செல்வம் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் லாரியை நிறுத்தினர்
    • போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பணுர் அருகே உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் தாறுமாறாக கன்டெய்னர் லாரியை டிரைவர் ஓட்டி சென்றுள்ளார்.

    இதை கண்ட பின்னால் வ ந்த மற்ற வாகனங்களின் டிரைவர்கள் பீதியடைந்து வாகனங்களை நிறுத்தினர்.

    இதனால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் நிலவியது.

    இதை பார்த்த பொதுமக்கள் லாரியை நிறுத்தினர். மேலும் டிரைவரை பிடித்து போலீசாரை வரவழைத்து டிரைவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து அம்பலூர் போலீசார் கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். விபத்து ஏற்படும் வகையில் குடி போதையில் கன்டெய்னர் லாரியை ஒட்டிய டிரைவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    • பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்
    • 50 சதவீத மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடி திறனை மேம்படுத்தவும், அவர்களின் வருவாயினை பெருக்கிட ஏதுவாக, உள்நாட்டு மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் மீன்பிடி உபகரணங்களான வலைகள் மற்றும் பரிசல்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மீன்பிடி வலைகள் அலகு ஒன்றிற்கான விலை ரூ.20 ஆயிரத்தில் 50 சதவீத மானியமாக ரூ.10 ஆயிரம் மற்றும் மீன்பிடி பரிசல் அலகு ஒன்றிற்கான விலை ரூ.20 ஆயிரத்தில் 50 சதவீத மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

    இத்தி ட்டத்தின் வாயிலாக ஏற்கனவே கடந்த 3 ஆண்டு களுக்குள் வலை மற்றும் பரிசல்கள் பெற்ற வர்கள் விண்ண ப்பிக்க தகுதிய ற்றவர்கள். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் வாங்கும் வலை மற்றும் பரிசல்கள் உரிய ஆய்வுக்கு பின்னரே மானியத்தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் உள்நாட்டு மீனவர்கள், மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் இந்த செய்தி வெளியிட்டு நாளிலிருந்து வெளிவந்த ஒரு வார காலத்திற்குள் வேலுார் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக முகவரி எண் 16, 5-வது மேற்கு குறுக்கு தெரு காந்தி நகர், காட்பாடி, வேலுார்-632006 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் அலுவலகத்தை தொலைப்பேசி வாயிலாகவோ அல்லது நேரில் சென்று தேவையான விவரங்களை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×