search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • குழந்தை இல்லாத ஏக்கத்தில் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பெத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாம்குமார், இவரது மனைவி சோனியா (வயது 23) இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

    சோனியாவிற்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மன உளைச்சலில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி சோனியா வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகமாக தின்று தற்கொலைக்கு முயன்றார்.

    இதை கண்ட அவருடைய கணவர் சோனியாவை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சோனியா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்களின்கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்தி ட்டத்தின்கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிறபடிப்புகளுக்கு பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    நிகழாண்டில் புதுப்பித்தல் மாணவர்கள் https://ssp.tn.gov.in இணையதள முகவரியில் சென்று ஆதார் எண்ணை அளித்து இணைக்க செய்ய வேண்டும். இதில் ஏதாவது இடர்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரி யில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுக வேண்டும்.

    கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான இணையதளம் நாளை முதல் செயல்படத் தொடங்கும்.

    இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரையோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது
    • அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தனி ஊராட்சியாக உள்ளது. இந்த மலை கிராமத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.

    இதில் மங்களம் கிராமத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டு, குழியுமாக காணப்பட்டது.

    அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மக்களின் கோரிக்கையை ஏற்று என்.என்.டி. நிதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.

    இதனை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீகிரிவேலன், துணைத் தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • சாலையின் வளைவில் திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வெங்கடசமுத்திரம் அடுத்த கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 60). ஆம்பூரில் உள்ள கடையில் டெய்லராக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு செல்வதற்காக கோவிந்தாபுரம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். சாலையின் வளைவில் திரும்பும் போது எதிரே வந்த மாட்டி வண்டியின் மீது எதிர்பாராத விதமாக இவர் ஓட்டி வந்த பைக் மோதியது.

    இதில் அவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
    • உடலை பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம் (53). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயன்பாட்டில் இல்லாத கிணறு ஒன்று பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த கிணற்றில் மான் குட்டி ஒன்று தவறி விழுந்து

    உயிரிழந்துள்ளதை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்தனர். இதுகுறித்து உடனடியாக வாணியம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து, வாணியம்பாடி வனவர் வெங்கடேசன் தலைமையில், வனக் காப்பாளர்கள் நாகராஜ், அரவிந்தன், பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து உயிரிழந்த நிலையில் மான் குட்டியை மீட்டனர்.

    பசி காரணமாக மான் குட்டி இறந்திருக்கலாம் என வனத்துறையினர் கூறினர். இறந்த மான்குட்டி உடலை பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.

    • ஒரே இடத்தில் உடல்களை புதைக்குமாறு வீடியோ பதிவு
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜீவிதா (வயது 18). பர்கூரில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.

    இவரது தாய் மாமன் சரண்ராஜ். நாட்டறம்பள்ளி பகுதியில் பைக் ஷோரூமில் டிரைவராக வேலைபார்த்து வந்தார்.

    ஜீவிதாவும், சரண்ராஜும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சரண்ராஜிடம் கடந்த சில மாதங்களாக ஜீவிதா பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சரண்ராஜ் நேற்று முன்தினம் ஜீவிதாவை, கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு, தப்பி ஓடி தலைமறைவானார்.

    மேலும் சரண்ராஜ் தானும், ஜீவிதாவும் 4 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், தற்போது தற்கொலை செய்து கொள்வதாகவும், இறந்த பின்பு ஒரே இடத்தில் உடல்களை புதைக்க வேண்டும் எனவும் செல்போனில் பேசி வீடியோவாக பதிவு செய்திருந்தார். கடிதம் ஒன்றும் எழுதி வைத்திருந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சரண்ராஜை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள டீ கடையில் சரண்ராஜ் அமர்ந்தி ருப்பதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்ப டையினர் வெலக்கல்நத்தம் பகுதிக்கு விரைந்து சென்று சரண்ராஜை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அப்போது அவர் விஷம் குடித்து விட்டதாக கூறியதால் உடனடியாக நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 பேர் கும்பல் கைது
    • வாகனங்கள் மூலம் கிராமங்களுக்கு சென்று பரிசோதனை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த பேராம்பட்டு கிராமத்தில் உள்ள குடிசை வீடு ஒன்றில் கர்ப்பிணிகளின் கருவில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து சொல்வதாகவும், பெண்ணா இருந்தால் கருகலைப்பு செய்வதாகவும் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், மாவட்ட போலீஸ் துறையினர் உதவியுடன் அந்த குடிசை வீட்டில் சோதனை நடத்தினர். இங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள் மற்றும் தரகர் ஆகியோர் இருந்தனர்.

    போலீசார், அவர்களைப் பிடித்து விசாரித்தனர். இதில், பிடிபட்ட தரகர் சங்கர் ( வயது 45) என்பதும், இவர் திருப்பத்தூரில் இயங்கி வரும் சுகுமார் ஸ்கேன் மையத்தின் தரகர் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சங்கரை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்கேன் மையத்தின் உரிமையாளர் சுகுமார் உள்பட 4 பேர் தலைமறை வாகினர். இவர்களை பிடிக்க திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமை யிலான தனிப்ப டை அமைக்கப்பட்டது. போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று ஸ்கேன்மைய உரிமையாளர் சுகுமார் (55), வேடியப்பன் (42), விஜய் (27), சிவா (36) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    ஸ்கேன் மைய உரிமை யாளர் சுகுமாரின் மகள் மற்றும் மகன் ஆகியோர் டாக்டராக வேலை செய்து வருகின்றனர். இவர் மீனாட்சி தியேட்டர் எதிரே அலுவலகம் வாடகை எடுத்து அதில் கருக்கலைப்பு மற்றும் குழந்தை பாலினம் கண்டறிவதை செய்து வந்தார்.

    அப்போது சப்- கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் அந்த மையத்தை மூடி சீல் வைத்து சுகுமாரை கைது செய்தனர். சுகுமார் ஏற்கனவே 5 முறைக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இருப்பினும் அவர் வாகனங்கள் மூலம் கிராமப்புறங்களுக்கு சென்று ஸ்கேன் செய்வது, கல்கலைப்பு செய்வது போன்ற சம்பவங்களில் தொடர்ந்த ஈடுபட்டு வந்தார்.

    ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருகலைப்பு செய்துள்ளார். அதேபோல் வேடியப்பனும் ஏற்கனவே 2 முறை கருகலைப்பு சம்மதமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

    இவர்களுக்கு யாரோ பின்பலம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 10 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் மாணவிகள் தவறி விழுந்து இறந்தனர்
    • குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குகோரி நடந்தது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். வாணி யம்பாடி எம்.எல்.ஏ. கோ.செந்தில்குமார், முன்னாள் எம்.எல். ஏ.க்கள் கோவி. சம்பத்குமார்,கே.ஜி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயலாளர் சிவகுமார் வரவேற்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கியிருந்த 10 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் மோனிகா, ராஜலட்சுமி ஆகிய பள்ளி மாணவிகள் தவறி விழுந்து இறந்தனர்.

    இறந்த மாணவிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதோடு, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    அதேபோல், ஆலங்காயம் பேரூராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான தேக்கு மரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் மஞ்சுளாகந்தன், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பாரதிதாசன், பேரூராட்சி துணை செயலாளர் சந்தோஷ், முன்னாள் பேரூராட்சி செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சரண்ராஜ் வீட்டின் அறைக்கு ஜீவிதாவை இழுத்து சென்று அவரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஜீவிதா (வயது 18). இவர் பர்கூர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்தார்.

    இவரது தாய் மாமன் கந்திலி கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த புகைப்படம் எடுக்கும் வேலை செய்து வந்த சரண்ராஜ் (34) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதில் ஜீவிதா சரண்ராஜிடம் கடந்த சில மாதங்களாக பேசவில்லை என கூறப்படுகிறது.

    நேற்று மதியம் வீட்டில் இருந்த ஜீவிதாவை, சரண்ராஜ் பணந்தோப்பு பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது ஜீவிதாவுக்கும், சரண்ராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரமடைந்த சரண்ராஜ் வீட்டின் அறைக்கு ஜீவிதாவை இழுத்து சென்று அவரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். மேலும் யாருக்கும் தெரியாமல் வீட்டை பூட்டி விட்டு சரண்ராஜ் சாவியை வீட்டருகே குளியலறையில் வீசிவிட்டு அங்கிருந்து தலைமறைவானார். வெகுநேரமாகியும் வீட்டிலிருந்து சென்ற மகள் வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் ஜீவிதாவை பல இடங்களில் சென்று தேடியும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் உறவினர்கள் சரண்ராஜிக்கு சொந்தமான வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் ஜீவிதா பிணமாக கிடந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து, அளித்த தகவலின் பேரில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது ஜீவிதா உடலுக்கு சரண்ராஜ் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து சரண்ராஜை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சரண்ராஜ் வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள டீ கடை முன்பு இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் வெளக்கல் நத்தம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    போலீசார் வருவதை கண்டதும் சரண்ராஜ் தன் கையில் வைத்திருந்த விஷத்தை குடித்தார்.

    போலீசார் அவரை கைது செய்து, சிகிச்சைக்காக நாட்டம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சரண்ராஜ் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதனை ஆய்வு செய்தனர்.

    சரண்ராஜ் தனது செல்போனில், ஜீவிதாவும், நானும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். அவரை திருமணம் செய்து கொள்ளலாம் வா என கூறினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

    எங்களால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இதனால் நான் ஜீவிதாவை கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்தேன். மனதளவில் நாங்கள் ஏற்கனவே கணவன்-மனைவியாக மாறிவிட்டோம். சாவும் நேரத்தில் கூட நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்.

    நான் இறந்த பிறகு எங்களது உடல்களை ஒரே இடத்தில் புதைக்க வேண்டும் என பேசி வீடியோவும் பதிவு செய்திருந்தார்.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விரைவில் நினைவுச் சின்னமாக அறிவிப்பு
    • ஓவியங்களில் கிளிகள் மற்றும் பலவிதமான பூக்கள் உள்ளன

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் நகருக்கு அருகில் மலையம்பட்டு கிராமத்தில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அர்மா மலையில் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண குகை அமைந்துள்ளது.

    மாவட்டத்தின் ஒரே பழங்கால குகை

    இது இந்த மாவட்டத்தின் ஒரே நினைவுச் சின்னமான பழங்கால குகையாகும்.

    இது மலையடிவாரத்தில் இருந்து 100 அடி உயரத்தில் 100 கிரானைட் படிக்கட்டுக ளுடன் அமைந்துள்ளது.

    மேலும் இந்தக் குகை பல அறைகளாக பிரிக்கப்பட்டு மண் மற்றும் சுடப்படாத செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 3000 சதுர அடியாக உள்ளது.

    இந்தக் குகையின் கூரை மற்றும் சுவர்களில் அழகிய சுவர் ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்கள் சமண மற்றும் அஸ்ததிக் பாலர்க ளின் கதைகளை சித்தரிப்ப தாக உள்ளது.

    பெரும்பாலான ஓவியங்களில் கிளிகள் மற்றும் பலவிதமான பூக்கள் உள்ளன.

    சித்தன்னவாசல் குகையை ஒத்து உள்ளது

    இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது :-

    குகை ஓவியங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குகை ஒத்துள்ளது.

    இந்தப் குகை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.20 லட்சம் செலவில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது உடைந்த கிரானைட் படிக்கட்டுகள் சரி செய்யப்பட்டன. நினைவு சின்னங்கள் சேத மடையாமல் இருக்க வேலி அமைக்கப்பட்டது.

    இதன் வரலாறு பற்றிய அறிவிப்பு பலகைகளும் நிறுவப்பட்டது. மேலும் இது விரைவில் மாநில அரசால் நினைவு சின்ன மாக அறிவிக்கப்படும் என்றனர்.

    இந்நிலையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அப்பகுதியில் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது :-

    குகையை பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. தற்போது வரை சுவர்களில்உள்ள அமைப்பு மற்றும் சுவரொ வியங்கள் மாறாமல் உள்ளன.

    மலையால் மூடப்பட்டி ருக்கும் சரியான பகுதியை மதிப்பிடுவதற்காக மலைப்பகுதியின் விரிவான ஆய்வுக்கு உத்தரவி டப்பட்டுள்ளது.

    மேலும் இந்த மலைப்பகுதி அடர்ந்த காப்புக்காடுகளுடன் 74.94 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது என்றார்.

    • மது விலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்
    • மூலப்பொருட்களை தீயிட்டு கொளுத்தினர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மாதகடப்பா மலையில் தேவராஜ்புரம், கொரிபள்ளம், தரைகாடு உள்ளிட்ட மலை பகுதிகளில் திம்மாம்பெட்டை மது விலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கொரிபள்ளம் மலைபகுதியில் கள்ள சாராயம் காய்ச்ச தயாராக வைத்திருந்த 2000 லிட்டர் கள்ள சாராய ஊறல்களை கண்டறிந்து அங்கேயே ஊற்றி அழித்தனர்.

    மேலும் கள்ள சாராயம் காய்ச்சுவதற்க்காக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்களையும் தீயிட்டு கொளுத்தினர். மேலும் போலீசார் வருவதை கண்டு தப்பி ஓடிய கள்ள சாராயம் காய்ச்சும் கும்பலை தேடி வருகின்றனர்.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • தாம்பூல பைகள், அன்னதானம் வழங்கப்பட்டது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னக்கல்லுப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் ஊர் மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் சார்பில் ஸ்ரீதேவி பூதேவி சமேத திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    கோவிலின் கருவறையில் உள்ள திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த திருக்கல்யாண வைபவத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் தாம்பூல பைகள் வழங்கி அன்னதானம் நடைப்பெற்றது.

    ×