search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • கோரையாற்றின் புதுப்பாலத்தின் அருகே சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
    • சமுதாய கூடம் கட்டப்பட்டு வருகிறது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நீடாமங்கலம் பேரூராட்சியில் ரூ.70.79 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதையும், பூவனூர் ஊராட்சியில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் நபார்டு வங்கி நிதிஉதவி திட்டத்தின் கீழ் பூவனூர் ஊராட்சி முதல் பெரம்பூர் ஊராட்சி வரை கோரையாற்றின் குறுக்கே புதுப்பாலத்தின் அருகே சாலை அமைக்கப்பட்டுவருவதையும்,

    திருவாரூர் மாவட்ட கலெக்டா சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.பின்னர் பெரம்பூர் ஊராட்சியில் ரூ.68.30 லட்சத்தில் முல்லைவாசல் கிராமம் முதல் பெரம்பூர் வரை சாலை அமைக்கப்பட்டு வருவதையும், பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், மேலாளவந்தசேரி ஊராட்சியில் ரூ.39 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டுவருவதையும் கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டார்.

    இதைப்போல அரிச்சபுரம் ஊராட்சியில் ரூ.42.50 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும், ரூ.3.88 லட்சம் மதிப்பில் அரிச்சபுரம் நடுநிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பழுதுநீக்க பணிகளையும் கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டார்.

    பின்னர் ரிஷியூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக கழக திருவாரூர் மண்டல நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சோ.செந்தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்ரமணியன், நமச்சிவாயம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் இருந்தனர்.

    • ஒருவர் வீட்டில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார்.
    • அப்போது எதிர்பாரத விதமாக தவறி விழுந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே பெருங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது54). விவசாய கூலித்தொழிலாளியான இவர் நேற்று திருவாரூர் சாமி மடத்தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார்.

    பின்னர் மரத்தை விட்டு இறங்கிய போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து பக்கிரிசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பக்கிரிசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் வீட்டின் 2-வது மாடியில் பூ பறிக்க சென்றுள்ளார்.
    • மன்னார்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அன்னவாசல் சேவியதெருவை சேர்ந்தவர் செல்வமுத்து.

    இவரது மகள் ஹரிணி (வயது 21).

    இவர் இளநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை இவர் வீட்டின் 2-வது மாடியில் பூ பறிக்க சென்றுள்ளார்.

    அப்போது ஹரிணி எதிர்பாரதவிதமாக கால் தடுமாறி மாடியில் இருந்து கீழே விழந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹரிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • மாநில அளவிலான போட்டியில் விளையாடி முதலிடமும் பிடித்துள்ளார்.
    • ஏழ்மை குடும்பம் என்பதால் வில்-அம்பு வாங்க முடியாத நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சி சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிச்சாமி. கூலி தொழிலாளி.

    இவரது மனைவி செம்மலர்.

    இந்த தம்பதிக்கு அஜிஷா என்ற மகள் உள்ளார்.

    இவர் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கலை கல்லூரியில் 3-ம் ஆண்டு தமிழ் இளங்கலை படித்து வருகிறார்.

    அஜிஷா சிறு வயது முதலே வில்வித்தை மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பமாக இருந்தாலும் தன் மகள் ஆசைபட்டால் என்பதற்காக பக்கிரிச்சாமி அஜிதாவை திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் கராத்தே ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியில் சேர்த்துள்ளார்.

    மாணவியும் சிறப்பாக பயிற்சி பெற்று ஒன்றிய, மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாடி பதக்கம் வென்றுளார்.

    மேலும், இவர் மாநில அளவிலான வில்வித்தை போட்டிக்கு தேர்வாகி சிறப்பாக விளையாடி முதலிடமும் பிடித்துள்ளார்.

    தொடர்ந்து, இவர் சர்வதேச விளையாட்டு போட்டிக்கு தயாராகி உள்ளார்.

    இந்நிலையில், போட்டியில் விளையாடு வதற்கு வில்-அம்பு கருவி வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    ஆனால் இதன் மதிப்பு ரூ. 3 லட்சத்திற்கு மேல் உள்ளது. ஏழ்மை குடும்பம் என்பதால் வில்-அம்பு வாங்க முடியாத நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார்.

    எனவே, தமிழக அரசு வில்-அம்பு வாங்குவதற்கு நிதி உதவி அளித்தால் சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

    தனது கனவு நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துைற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.

    • ராஜாவை காணவில்லை என அவரின் உறவினர்கள் தேடி வந்தனர்.
    • திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே கொரடாச்சேரி எருக்காட்டூரை அடுத்த நத்தம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜா (வயது 50).

    இவர் திருவாரூரில் இளநீர வியாபாரம் செய்து வந்தார்.

    இவரது மனைவி விசாலாட்சி.

    இவர்களுக்கு விஜய், விமல் என்ற இரண்டு மகன்களும், வினிதா என்ற மகளும் உள்ளனர்.

    அதே ஊரைச் சேர்ந்த வீரமணி, தனது மனைவியுடன் ராஜாவுக்கு தகாத உறவு இருந்ததாக சந்தேகம் அடைந்துள்ளார்.

    இதனால் ராஜா மீது வீரமணி கோபத்தில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி இரவு ராஜா மது அருந்திவிட்டு எருக்காட்டூர் வாய்க்கால் மதகு அருகில் நின்றுகொண்டு இருந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த வீரமணி மற்றும் அவரது உறவினர் சரவணன் ஆகிய இருவரும் தகாத உறவு குறித்து ராஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனை ராஜா மறுத்தாலும் சந்தேகம் தீராத நிலையில், இருவரும் சேர்ந்து ராஜாவை அருகில் இருந்த வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி கொலை செய்து, வாய்க்கால் மதகின் உள்ளே வைத்து மறைத்துள்ளனர்.

    ராஜாவை காணவில்லை என அவரின் உறவினர்கள் தேடி வந்தனர்.

    இந்நிலையில் எருக்காட்டூர் வாய்க்கால் மதகு உட்புறம் ராஜாவின் உடல் அழுகிய நிலையில் இருந்ததை சிலர் பார்த்துள்ளனர்.

    இது தொடர்பாக கொரடாச்சேரி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை தொடர்பாக வீரமணி மற்றும் சரவணன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தன் மனைவியுடன் தகாத உறவு இருப்பதாக கருதி கொலை செய்ததாக வீரமணியும், அவரது மைத்துனர் சரவணனும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

    அதன் அடிப்படையில் கொரடாச்சேரி போலீசார் வீரமணி (வயது 40), சரவணன் (வயது 30) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    உடனடியாக குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை பாராட்டினார்.

    கள்ளக்காதல் காரணமாக இளநீர் வியாபாரி தண்ணீரில் அமிக்கி கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குழந்தைகளின் நாக்கில் 3 முறை தேனை தொட்டு வைத்தனர்.
    • பிள்ளையார் சுழி எழுதி அதற்கு பின்பு தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதப்பட்டன.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில்பி ரசித்தி பெற்ற சரஸ்வதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் ஒட்டக்கூத்தரால் பாடல் பெற்ற ஆலயமாகும். ஒட்டக்கூத்தர் வாழ்ந்த ஊர் என்பதாலும் அவர் வழிபட்ட தலம் என்பதாலும் இந்த ஊருக்கு கூத்தனூர் என்று பெயர் பெற்றது.

    இந்தக் கோவிலில் சரஸ்வதி பூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    அதையொட்டி வெண்பட்டு ஆடை அணிந்து பக்தர்களுக்கு சரஸ்வதி அம்மன் அருள் பாலித்தார்.

    தொடர்ந்து பாத தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இன்று விஜயதமி யையொட்டி கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சரஸ்வதி அம்மனுக்கு இன்று சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரங்கள் செய்யப்ப ட்டன.

    அதனைத் தொடர்ந்து தங்களது குழந்தைகளுடன் வந்த ஏராளமான பெற்றோர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்திய பின்னர், நெல்மணிகளை பரப்பி அதில் தங்களது குழந்தைகளை தமிழ் உயிர் எழுத்தின் முதல் எழுத்தான அவை எழுதவைத்து வித்யாரம்பம் செய்து வைத்தனர்.

    முன்னதாக குழந்தைகளின் நாக்கில் மூன்று முறை தேனை தொட்டு வைத்த பின்பு அவர்கள் காதுகளில் மந்திரங்களை சொல்லி அதன் பின்னர் நெல்மணி களில் பிள்ளையார் சுழி எழுதி அதற்கு பின்பு தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதப்பட்டன.

    இன்று பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்தால் கல்வியறிவு மேன்மையையும் என்பது ஐதீகம் அதன் அடிப்படையில் குழந்தைகள் உடன் பெற்றோர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

    விஜயதசமி விழாவை ஒட்டி தமிழக முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.

    கூட்ட நெரிசலை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • மன்னார்குடி- திருத்துறைப்பூண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
    • சொகுசு காரை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    மன்னார்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வைரவபுரம் பகுதியை சேர்ந்த அரபாத் (வயது 28), ஆறுமுகம் (50), செல்வராஜ் (55) ஆகிய 3 பேரும் சொகுசு காரில் மன்னார்குடிக்கு வந்துள்ளனர்.

    பின்னர், அந்த காரில் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கீழப்பாலம் அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் சென்றபோது சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த 4 ஆடுகளை பிடித்து தங்கள் காருக்குள் வைத்து கடத்திவிட்டு வேகமாய் சென்றனர்.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மன்னார்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதி மக்களின் உதவியுடன் சொகுசு காரை கண்டறிந்து அதில் இருந்த 4 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பல ஆண்டுகளாக ஆடு திருடுவதை வழக்கமாக வைத்துள்ளது தெரியவந்தது.

    பட்டப்பகலில் ஆடுகள் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 21 வகையான சீர்வரிசை பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.
    • கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    கோட்டூர் அடுத்த ஆதிச்சபுரத்தில் குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா கோட்டூர் ஒன்றிய தலைவர் மணிமேகலை தலைமையில், கோட்டூர் வட்டார திட்ட அலுவலர் அபிநயா முன்னிலையில் நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தாம்பூலம், குங்கும சிமிழ், புடவை, வெற்றிலை, பாக்கு, பூ, வளையல், பழங்கள் உள்பட 21 வகையான சீர்வரிசை பொருட்களை 100 கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார்.

    விழாவில் தாய்பால் கொடுப்பதன் அவசியம் குறித்தும், கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் குறித்தும் கர்ப்பிணிகளுக்கு எடுத்துரைக்க ப்பட்டது.

    இதில் டாக்டர் பிரியங்கா, மேற்பார்வையாளர்கள் தமிழ்செல்வி, சுசீலா, விஜயா, திட்ட உதவியாளர் பிரபு, அலுவலக உதவியாளர் அருண்ராஜ், கோட்டூர் வட்டார அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை பணியாளர் கவிதா தொகுத்து வழங்கினார்.

    முடிவில் பணியாளர் கனகா நன்றி கூறினார்.

    • தட்டாங்கோவில் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
    • திருடப்பட்ட பொக்லைன் எந்திரத்தை விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த விக்கிரபாண்டியம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்.

    இவர் பொக்லின் எந்திரம் வைத்து வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில், இவர் கடந்த 13-ந் நாட்களுக்கு முன்பு தட்டாங்கோவில் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    இரவு நேரம் ஆனதால் பொக்லைன் எந்திரத்தை அதே சாலையில் நிறுத்தி விட்டு வீடு திரும்பினார்.

    பின்னர், மறுநாள் காலை வந்து பார்த்தபோது பொக்லைன் எந்திரத்தை காணவில்லை.

    இதனை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    தொடர்ந்து, அருகில் தேடிபார்த்து விட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் பொக்லைன் எந்திரம் குறித்து விசாரித்தார்.

    தொடர்ந்து, இதுகுறித்து தினேஷ் கோட்டூர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் கோட்டூர் போலீசார் தனிப்படை அமைத்து பொக்லைன் எந்திரத்தை திருடி சென்றவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட பொக்லைன் எந்திரம் திருவிடைமருதூர் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த காளீஸ்வரனின் உதவியுடன் விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோட்டூர் போலீசார் திருவிடைமருதூர் பகுதியில் மறைத்து வைத்திருந்த பொக்லைன் எந்திரத்தை கைப்பற்றி அதனை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

    மேலும், திருட்டில் ஈடுபட்டதாக ஜெயசீலன், செய்யது சம்சுல்குதா, விக்னேஷ், காலிஸ்வரன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    திருட்டு சம்பவம் நடந்த 10 நாட்களில் மர்மநபர்களை பிடிக்க விரைந்து செயல்பட்ட கோட்டூர் தனிப்படை போலீசாரை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • பேரிடர் தொடர்பு எண் 1077-ஐ செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு, பேரிடர் பயிற்சியாளர் திருத்துறைப்பூண்டி பாலம் செந்தில்குமார் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    எனவே தாலுகா வாரியாக மண்டல நிவாரண அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

    தாலுகா, ஒன்றியம், நகராட்சி வாரியாக பேரிடர் பொறுப்பு அலுவலர்களை நியமித்து 24மணி நேர பணியாக இருக்க வேண்டும். அவர்களின் தொலைபேசி எண்ணையும் வெளியிட வேண்டும்.

    மாவட்ட கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி பேரிடர் தொடர்பு எண் 1077 ஐ செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    பேரிடர் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மெதுவாக வீட்டின் உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்திருந்த ஜெயலட்சுமியின் கழுத்தில் கத்தி வைத்து அவர் அணிந்திருந்த தங்கநகைகளை பறித்தனர்.
    • அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் கொள்ளையர்களை விரட்டி சென்று தேடினர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 30). இவரது கணவர் சஞ்சய் காந்தி. இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சஞ்சய் காந்தி வெளிநாட்டில் இருப்பதால் ஜெயலட்சுமி குழந்தையை வைத்துக்கொண்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு துணையாக அவரது மாமனார் வைரக்கண்ணு (82) வந்து தங்குவது வழக்கம்.

    இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் ஜெயலட்சுமி மற்றும் அவரது மாமனார் இருவரும் வீட்டில் டி.வி பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வீட்டின் பின்பக்கம் வழியாக முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.

    மெதுவாக வீட்டின் உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்திருந்த ஜெயலட்சுமியின் கழுத்தில் கத்தி வைத்து அவர் அணிந்திருந்த தங்கநகைகளை பறித்தனர். இதனை கண்ட அவரது மாமனார் வைரக்கண்ணு அதனை தடுக்க முயன்றார். அப்போது மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வைரக்கண்ணு வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கொள்ளையர்களை நோக்கி வீசினார்.

    இதனால் பயந்த கொள்ளையர்கள் பெண்ணிடம் இருந்து பறித்த நகைகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு அலறிஅடித்து தப்பி சென்றனர். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் கொள்ளையர்களை விரட்டி சென்று தேடினர். ஆனால் அவர்கள் அதற்குள் தப்பி விட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) திருவாரூர் சரவணன், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) எடையூர் ஆனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், புஷ்பநாதன் மற்றும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி சோதனை செய்தனர். அதன் அடிப்படையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக திருத்துறைப்பூண்டி அடுத்த கச்சனம் அம்மனூர் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (26), அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (22), விளத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக்ராஜா, கச்சனம் பகுதியை சேர்ந்த சினநேசன் (23) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வீட்டில் புகுந்த கொள்ளையர்களை துணிச்சலுடன் அரிவாளை கொண்டு விரட்டிய முதியவரின் வீரதீர செயலை கண்டு அனைவரும் வியந்தனர். கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
    • நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் அ.தி.மு.க. மாவட்ட செயல்வீரர்- வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.

    கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் திருவாரூர் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான இளவரசன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

    இந்த கூட்டத்தில், தமிழக அரசு மேட்டூர் அணை நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து இவைகளை கணக்கில் கொள்ளாமல் முன்கூட்டியே தண்ணீரை திறந்து விட்டு அதனால் நீர் மேலாண்மை குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் குளறுபடியான நீர் மேலாண்மை செயலை கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரமாக செயல்பட்டு அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

    நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி மையம் வாரியாக பூத் கமிட்டி அமைப்பது என்றும், அதில் மகளிர் அணி, இளைஞர் இளம் பெண்கள் பாசறை யினர் உள்ளிட்டோருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவது என தீர்மானங்கள் நிறைவே ற்றப்பட்டன.

    இதில் அமைப்பு செயலாளர்கள் சிவா.ராஜமாணிக்கம், கோபால், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள், ஒன்றியச் செயலாளர்கள் மணிகண்டன், செந்தில், பாஸ்கர், தமிழ்ச்செல்வன், நகரச் செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×