search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • பிரச்சார கலை நிகழ்ச்சி, விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
    • மன்னார்குடி, பெருகவாழ்ந்தான், முத்துப்பேட்டை, நெடும்பலம் ஆகிய பகுதிகளில் பிரச்சார நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    உலக மனநல தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூ ண்டி நம்பிக்கை தொண்டு நிறுவனம், சென்னை மக்கள் மனநல அமைப்பு சார்பில் மனநல விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி வாகன பிரச்சாரம் நடைபெற்றது.

    தொடர்ந்து, பிரச்சார கலை நிகழ்ச்சி, விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. அதில் மனநிலை பாதிக்கப்ப ட்டவர்களை எவ்வாறு கையாள்வது, பாதுகாப்பது குறித்து ஒருவர் மனநலம் பாதிக்கப்ப ட்டவர் போன்று வேடமணிந்து தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.

    தொடர்ந்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    பிரச்சார மானது மன்னா ர்குடி, பெருகவாழ்ந்தான், முத்துப்பேட்டை, நெடும்பலம் ஆகிய பகுதிகளில் நடை பெற்றது.

    தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், மனோகரன், நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் சவுந்தரராஜன், திட்ட மேலாளர் விஜயா மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பழுதடைந்த நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டது.
    • நாச்சிகுளம் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த நாச்சிகுளம் கிராமத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.

    அவரிடம் நாச்சிகுளம் தவ்ஹீத் ஜமாத் கிளை செயலாளர் அலாவுதீன் தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உதயமார்தாண்டபுரம் ஊராட்சி அலுவலகம் அருகில் பழுதடைந்த நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டது. அதற்கு மாற்றாக நாச்சிகுளம் பகுதிக்கு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வில்லை.

    இதனால் நாச்சிகுளம் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    இந்நிலையில், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அனுமதி கிடைத்ததாக சொல்லப்பட்ட நிலையில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, கிராமமக்கள் நலனை கருத்தில் கொண்டு நாச்சிக்குளம் பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மனநலம் பாதிக்கப்பட்டவரை எவ்வாறு வழிநடத்துவது, குணப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.
    • தொடர்ந்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    மன்னார்குடி:

    உலக மனநல தினத்தை யொட்டி மன்னார்குடி இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பு, நேசக்கரம், திருத்துறைப்பூண்டி நம்பிக்கை தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மன்னார்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வெளியிட அதனை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பு லட்சுமி பெற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் நம்பிக்கை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.

    திட்ட இயக்குனர் விஜயா, மன்னார்குடி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் வட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன், துணை தலைவர் ஆசிரியர் ராஜப்பா, நேசக்கரம் ஆசிரியர் தங்கபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நேசக்கரம் ஒருங்கிணை ப்பாளர்கள் கார்த்திகேயன், தீனதயாளன், நேசக்கரம் தன்னார்வலர் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பெலிக்ஸ், எழிலரசன் மற்றும் கலை குழுவினர் கலந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தத்ரூபமாக நடித்து, அவரை எவ்வாறு வழிநட த்துவது, குணப்படுத்துவது என்று நாடகம் மூலம் விளக்க ப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொக்கலாடி ஊராட்சியில் 25 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டது.
    • மழைக்காலங்களுக்கு முன்னதாக அனைத்து விதைகளும் நடவு செய்யப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டத்திற்காக திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தை சார்ந்த ஆதிரெங்கம், கொருக்கை, கொக்காலடி ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்களால் ஒரு லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு திருத்து றைப்பூண்டி தாசில்தார் கலை.காரல் மார்க்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அவ்வாறு சேகரிக்க ப்பட்ட பனை விதைகளில் முதற்கட்டமாக 20 ஆயிரம் விதைகளை திருத்துறைப்பூண்டி தாசில்தார், மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயிடம் வழங்கினார்.

    அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் பனை விதைகளை நடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனர் துரை ராயப்பனிடம் வழங்கினார்.

    இதுகுறித்து ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனர் துரை ராயப்பன் கூறுகையில்:-

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொக்கலாடி ஊராட்சியில் 25 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டு ஒன்றரை அடி உயரம் வளர்ந்துள்ளது.

    வருகின்ற மழைக்காலங்களுக்கு முன்ன தாக அனைத்து விதைகளும் நடவு செய்யப்படும் என்றார்.

    தரமான பனை விதைகளை சேகரித்து இயற்கையை நேசிக்கின்ற ஊராட்சி தலைவர்களான ஆதிரெங்கம் வீரா (எ) வீரசேகரன், கொறுக்கை ஜானகிராமன், கொக்காலடி வசந்தன் ஆகியோர்களை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெகுவாய் பாராட்டினார்.

    நிகழ்ச்சியின் போது வருவாய் ஆய்வாளர்கள் முரளிதரன், சிவக்குமார், கொருக்கை கிராம உதவியாளர் ராஜ முத்துவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • முத்துப்பேட்டை போலீசார் லாரியை சாலையிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    முத்துப்பேட்டை:

    திண்டுக்கல்லில் இருந்து தில்லைவிளாகம் கிராமத்திற்கு தென்னை மட்டைகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று முத்து ப்பேட்டை கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில், இன்று அதிகாலையில் திடீரென சாலையில் உள்ள சென்டர் மீடியனில் லாரி எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் லாரியின் முன்பகுதியில் உள்ள இரு சக்கரமும் துண்டாகி லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

    இதில் லாரியை ஓட்டி வந்த டிரை வரான புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கிராமத்தை சேர்ந்த பாலகிரு ஷ்ணன் (வயது 27) என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதனால் அப்பகு தியில் பல மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அவ்வழியாக வந்த வாகன ங்கள் மாற்று பாதையில் திருப்பி அனுப்ப ப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை போலீசார் லாரியை சாலையிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அனைத்து குடும்ப தலைவிக்கும் ரூ.1000 கொடுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மன்னார்குடி:

    கூத்தாநல்லூர் அடுத்த லெட்சுமாங்குடி பாலத்தில் இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி வளரும் தமிழக கட்சி சார்பில் பட்டியல் வெளியேற்ற கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    லெட்சுமாங்குடி நகர செயலாளர் முருகபா ண்டியன் அனைவரையும் வரவேற்றார்.

    திருவாரூர் மாவட்ட செயலாளர் (தெற்கு) சந்திரகுமார் முன்னிலை வகித்தார். மன்னார்குடி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.

    இதில் சிங்கை சரவண சோழன், ஆரோக்கிய செல்வன், ராஜா, கிட்டு ராஜசேகர், முகிலன், வினேஷ் பாவா ரமேஷ் குமார், கவிதா பழனிவேல், சதாசதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு ேபசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 என அறிவித்து அனைத்து குடும்ப தலைவிக்கும் கொடுக்காததை கண்டித்தும், சம்பா சாகுபடிக்கு கர்நாடகா அரசிடம் தண்ணீரை பெற்று தராத தி.மு.க அரசை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.

    முடிவில் மாவட்ட விவசாய அணி தலைவர் விக்னேஷ் நன்றி கூறினார்.

    • போதிய தண்ணீர் வராததால் குறுவை பயிர்கள் கருக தொடங்கின.
    • நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொடும்பாவியை இழுத்து சென்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்ட இடங்களில் போதிய தண்ணீர் வராததால் பயிர்கள் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற, வருண பகவானிடம் மழை பெய்ய வேண்டி விவசாயிகள் கொடும்பாவி இழுத்து நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    களிமண்ணால் கொடும்பாவி கட்டி வயிற்று நடுவே தீச்சட்டி வைத்து நெடும்பலம், அண்ணாநகர் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொடும்பாவியை இழுத்து சென்றனர்.

    பின், முள்ளியாற்றில் கொடும்பாவியை விட்டனர்.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணிகள் கலந்து கொண்டன.
    • 3-ம் இடத்தை டெல்டா வடுவூர் அணியும் பிடித்தது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அடுத்த பயங்காடு கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி 3 நாட்கள் நடைபெற்றது.

    போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணிகள் கலந்து கொண்டன. போட்டியின் இறுதி ஆட்டமானது நேற்று நடை பெற்றது.

    இதில் சென்னை சாய் கபடி அணி முதல் இடத்தை பிடித்து, ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை வென்றது.

    தொடர்ந்து, 2-ம் இடத்தை தமிழ்நாடு வனத்துறை காவல்துறை அணியும், 3-ம் இடத்தை டெல்டா வடுவூர் அணியும் பிடித்தது.

    போட்டியை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • கைது செய்யப்பட்ட வர்களிடம் விசாரித்ததில் தாங்கள் 2 பவுன் மட்டுமே திருடியதாக ஒப்புக்கொண்டனர்.
    • லாவண்யா நகைகளை வீட்டில் தானே மறைத்து வைத்துக்கொண்டு நாடகம் ஆடியது தெரியவந்தது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில் மகாலட்சுமி நகரில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார்.

    இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி லாவண்யா (வயது 35).

    இந்நிலையில் தனது மனைவி லாவன்யா, மகளுடன் கடந்த செப்டம்பர், 30 ம் தேதி செட்டி சத்திரம் கிராமத்தில் வசித்து வரும் தனது தாயாரை பார்க்க வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த 75 பவுன் திருட்டு போனது.

    இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, பிரபாகரன், ராஜ்மோகன், முத்து ஆனந்த் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட வர்களிடம் விசாரித்ததில் தாங்கள் 2 பவுன் மட்டுமே திருடியதாக ஒப்புக்கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து போலீசார் லாவண்யாவை நேரில் அழைத்து விசாரித்து எச்சரிக்கை செய்தனர்.

    பின்னர் தனது வீட்டில் மற்றொரு பேக்கில் 73 பவுன் நகை இருந்ததாக கூறி காவல் காவல் நிலையத்தில் லாவன்யா ஒப்படைத்தார்.

    அதனைத் தொடர்ந்து லாவண்யாவை தங்க நகையை வீட்டில் தானே மறைத்து வைத்துக் கொண்டு நாடகம் ஆடியதாகவும், பொய் புகார் அளித்ததாகவும் வழக்கு பதிவு செய்த மன்னார்குடி போலீசார் நேற்று இரவு லாவன்யாவை கைது செய்தனர்.

    • ஒரு ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே இறால் பண்ணைகளுக்கு மின்சார பயன்பாடு உள்ளது.
    • இறாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், தம்பிக்கோட்டை கீழக்காட்டிற்கு மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரி எல். முருகன் ஆகியோர் வருகை தந்தனர்.

    அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட பா.ஜனதா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர், அங்கிருந்த கொடிகம்பத்தில் கட்சி கொடியை மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா ஏற்றினார்.

    அதனை தொடர்ந்து, தம்பிக்கோட்டை கீழக்காடு இறால் பண்ணை உரிமையா ளர்கள் சங்கம் சார்பில் அவர்களிடம் கோரி க்கை மனு அளிக்கப்பட்டது.

    அந்த மனுவில் கூறியி ருப்பதாவது:-

    ஒரு ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே இறால் பண்ணைகளுக்கு மின்சார பயன்பாடு உள்ளது.

    மீதமுள்ள 6 மாதங்கள் பயன்பாடு இல்லாத போது கே.வி.ஏ. ரூ.40-ல் இருந்து ரூ.150-ஆக மின்கட்டணத்தை குறைக்க வேண்டும்.

    இறாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.

    இறால் பண்ணைக ளுக்கான புதிய லைசென்சு காலதாமதமின்றி வழங்கவும், ரினிவல் விரைந்து வழங்க வேண்டும். பேரிடர் காலங்களில் இறால் பண்ணைகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் இறால் பண்ணை தொழில் நடைபெற்று வருகிறது.

    எனவே, இப்பகுதியில் இறால்களை பதப்படுத்த குளிர்சாதன கிடங்கு அமைத்துத்தர வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை கொள்கை ரீதியாக தி.மு.க. அரசு ஏற்றுக்கொள்கிறதா?
    • இதுவரை ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூடாதது ஏன்?

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே பெரியகுடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்ட பகுதிக்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெரியகுடி எண்ணெய் கிணற்றில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி கியாஸ் வெளியேறி தீப்பிடித்து எரிந்தது. இதை தொடர்ந்து அப்போதைய மாவட்ட கலெக்டர் நடராஜன், இந்த கிணற்தை மூட உத்தரவிட்டார்.

    அதன் பிறகு 2022-ம் ஆண்டு இந்த கிணற்றை செயல்பாட்டு கொண்டு வருவதற்கு மறைமுகமாக நடவடிக்கை நடந்தது. இதை அறிந்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தோம்.

    இதை தொடர்ந்து அப்போதைய கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் ஆகஸ்டு 13-ந் தேதி சமாதான கூட்டம் நடந்தது.

    இதில் ஓ.என்.ஜி.சி. அதிகாரி, இந்த கிணற்றை 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நிரந்தரமாக மூட அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    ஆனால் இதுவரை கிணற்றை மூட நடவடிக்கை எடுக்கவில்லை.

    கடந்த சில நாட்களாக இந்த எண்ணெய் கிணற்றில் இருந்து கியாஸ் வெளியேறி வருகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை கொள்கை ரீதியாக தி.மு.க. அரசு ஏற்றுக்கொள்கிறதா?, இல்லையா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

    இதுதொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சுல்தான் இஸ்மாயில் குழு அறிக்கையை வெளியிடாமல் வைத்திருப்பது ஏன்?, என்பதை உடனடியாக வெளியிட வேண்டும்.

    இதுவரை ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூடாதது ஏன்?

    திருவாரூர் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் கொடுத்த அடிப்படையில் இந்த எண்ணெய் கிணற்றில் இருந்து குழாய்களை அகற்றி விட்டு நிரந்தரமாக மூடி சிமெண்டு தளம் அமைக்க வேண்டும்.

    இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில துணை செயலாளர் செந்தில் குமார், மாவட்ட துணை செயலாளர் முகேஷ், கோட்டூர் வடக்கு ஒன்றிய தலைவர் சேகர் உள்ளிட்ட விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்ட சம்பா பயிர்கள் கருக தொடங்கின.
    • ஹெக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 500 அரசு நிவாரணம் தொகை அறிவித்துள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியாகும்.

    முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் இந்த பகுதிக்கு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் பாசனத்திற்கான நீரை மட்டுமே கொண்டு இப்பகுதியில் குருவை, சம்பா, தாளடி, பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது.

    ஜூன் 12-ம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டும் கடைமடை பகுதிகளான திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பகுதிகளுக்கு முள்ளி ஆறு. பாமணி கோரையாறு. அரிச்சந்திரா அடப்பாறு என அனைத்து ஆறுகளின் பாசன வாய்க்கால்கள் வடிகால்களை முறையாக முழுமையாக தண்ணீர் வந்துசேரவில்லை.

    இதனால் நடப்பாண்டில் திருத்துறைப்பூண்டி பகுதியில் 20 ஆயிரம் ஏக்கர், முத்துப்பேட்டை பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்ட குருவைப் பயிர்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டது.

    இதனால் பல விவசாயிகள் கருகிய குருவைப் பயிர்களை டிராக்டர்களை கொண்டு அழித்து சம்பா பயிரை நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா விவசாய பணிகளை மேற்கொண்டனர்.

    தற்பொழுது கர்நாடகாவில் காவேரியில் தண்ணீர் தர முடியாது என பல்வேறு போராட்டங்களில் தீவிரமடைந்த நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் வராத நிலையிலும், மழை இல்லாத காரணத்தினாலும் திருத்துறைப்பூண்டி பகுதியில் 14 ஆயிரம் ஏக்கரில், முத்துப்பேட்டை பகுதியில் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் பயிர் செய்யப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீர் மழை இன்றி கருக தொடங்கியுள்ளது.

    இதனால் விவசாயிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான குளங்களில் இருந்து இறவை இஞ்சின் மூலம் வயல்கலுக்கு தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர்.

    குளங்களில் உள்ள தண்ணீரை இறைப்பதால் கால்நடைகள் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் பாதிக்கபடுகின்றது.

    மேலும் குளங்களில் வாய்க்காலில் உள்ள நீரை கொண்டு தற்போது பயிரை காப்பாற்றினாலும் மழை இல்லாமல் கடும் வெயிலால் கருகும் பயிரை வரும் காலங்களில் எப்படி காப்பாற்றுவது என விவசாயிகள் கண்ணீர் வடிகின்றனர்.

    குறுவை பாதிப்பிற்கு ஹெக்டருக்கு 13.500 ரூ அரசு நிவாரணம் தொகை அறிவித்துள்ளது. அதனை அதிகாரிகள் பாரபட்சமின்றி ஆய்வு செய்து உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×