search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கியாஸ் வெளியேறும் பகுதியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அலுவலர்கள் பெரியக்குடி கிராமத்திற்கு நேரில் சென்று மூடப்பட்ட கிணற்றை பார்வையிட்டனர். பின்னர், மீட்டர் கருவி மூலம் ஆய்வு செய்தனர்.

    மன்னார்குடி:

    தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதித்து எண்ணெய் எடுக்கும் திட்டத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செயல்படுத்தி வந்தது.

    அதன்படி, திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே சேந்தமங்கலம் ஊராட்சி, பெரியக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2 எண்ணெய் கிணறுகளை அமைத்து இருந்தது. இதில் ஒரு கிணற்றில் கடந்த 2013-ம் ஆண்டு அதிக அழுத்தம் காரணமாக கியாஸ் வெளியேறியது.

    இதனால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து இந்த எண்ணெய் கிணறுகள் மூடப்பட்டது.

    இந்நிலையில் பெரியக்குடி கிராமத்தில் மூடப்பட்ட ஒரு எண்ணெய் கிணற்றில் இருந்து நேற்று காலை திடீரென அதிகளவில் கியாஸ் கசிந்தது. தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் கியாஸ் வாசனை வீசத்தொடங்கியது. அவ்வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அதிகளவில் கியாஸ் வாசனை வீசத்தொடங்கியதால் கிராமமக்கள் பெரிதும் அச்சம் அடைந்தனர்.

    எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதால் உடனடியாக ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கியாஸ் வெளியேறும் பகுதியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் பெரியக்குடி கிராமத்திற்கு நேரில் சென்று மூடப்பட்ட கிணற்றை பார்வையிட்டனர். பின்னர், மீட்டர் கருவி மூலம் ஆய்வு செய்தனர். இதில் ஆயில் மற்றும் கியாஸ் எதுவும் வெளியாக வில்லை எனவும் காற்று மட்டுமே வருகிறதாகவும் தெரிவித்தனர்.

    மேலும், இதனை இன்னும் 2 நாட்களில் நிறுத்தி விடுவோம் என தெரிவித்தனர்.

    • 100 சென்பக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • 100 நாதஸ்வர கலைஞர்கள், மிருதங்க கலைஞர்கள் பங்கேற்ற இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மன்னார்குடி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் வளாகத்தில் 100 சென்பக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர் பி.ராஜா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக ஸ்ரீ ராமானுஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி 100 நாதஸ்வர கலைஞர்கள், மிருதங்க கலைஞர்கள் பங்கேற்ற இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பின்னர், 100 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு,மன்னார்குடி நகர்மன்ற தலைவர் சோழராசன், நகர செயலாளர் வீரா கணேசன், ஒன்றிய செயலாளர்கள் மன்னார்குடி எஸ்.டி.முத்துவேல் (மேற்கு), சிவா (கிழக்கு), நீடாமங்கலம் ஆனந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.கே.முருகானந்தம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    • குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 16 பேரை கைது செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின்படி, திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் திருத்துறைப்பூண்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கடையில் இருந்த குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 16 பேரை கைது செய்தனர்.

    • எண்ணெய் கிணறு உள்ள பகுதியை சுற்றி சின்னகுறுவாடி, பெரியகுடி, அம்பத்தார் குளமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
    • உடனடியாக ஓஎன்ஜிசி துறை அதிகாரிகள் கேஸ் வெளியேறும் பகுதியினை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே விக்கிரபாண்டியம் ஊராட்சி காரியமங்கலம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்.

    இந்த கிராமத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான ஓஎன்ஜிசி நிறுவனம் 2 எண்ணெய் கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுத்து வந்தது. இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் பணிகள் நிறைவடைந்தால் அந்த 2 எண்ணெய் கிணறுகளும் மூடப்பட்டது. இந்த எண்ணெய் கிணறு உள்ள பகுதியை சுற்றி சின்னகுறுவாடி, பெரியகுடி, அம்பத்தார் குளமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. அதில் சுமார் 1000 குடும்பத்தினர் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை காரியமங்கம் பகுதியை சேர்ந்தவர்கள் எண்ணெய் கிணறு உள்ள பகுதி வழியாக நடந்து சென்றனர். அப்போது அங்கு கியாஸ் வாசனை வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் எண்ணெய் கிணறு அருகே சென்று பார்த்த போது மூடப்பட்ட எண்ணை கிணற்றிலிருந்து அதிகளவில் கேஸ் வெளியேறி வருவது தெரிய வந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதால் உடனடியாக ஓஎன்ஜிசி துறை அதிகாரிகள் கேஸ் வெளியேறும் பகுதியினை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • கொறுக்கை ஊராட்சியில் அதிகமான பனை மரங்கள் உள்ளது.
    • உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும்.

    திருத்துறைப்பூண்டி:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அடுத்த கொறுக்கை ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பனை ஓலை தொழில்நுட்ப பயிற்சி 20 பெண்களுக்கு நடத்த ப்பட்டது.

    பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி முன்னாள் ஊராட்சி தலைவர் வடிவேல், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ஜானகி ராமன் தலைமை தாங்கி பேசுகையில்:-

    கொறுக்கை ஊராட்சி யில் அதிகமான பனை மரங்கள் உள்ளது. ஆனால், இதன்மூலம் கிடைக்கும் பயன்களை யாரும் அறியவில்லை.

    இதில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் மக்கள் அதிக வருமானம் ஈட்ட முடியும். எதிர்காலத்தில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க உள்ளது.

    மேலும், இது போன்ற பயிற்சிகள் தொடர்ந்து செய்ய ஏற்பாடு செய்ய ப்படும் என்றார்.

    நிகழ்ச்சி யில் பயிற்சி யாளர் ஜான்சி ராணி பயிற்சி விபரங்களை குறித்து எடுத்துரைத்தார்.

    ஊரக வாழ்வா தார இயக்க வட்டார மேலாளர் புரு ஷோ த்தமன், மகளிர் கூட்ட மைப்பு தலைவி சுமதி, பணித்தள பொறுப்பாளர் சாவித்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஆயிரம் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்கி கொடுக்க வேண்டும்.
    • இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை உணவை முதன்மைப்படுத்த வேண்டும்.

    மன்னார்குடி:

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் ஜெயகணபதி தலைமையில் மன்னார்குடியில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் பிரேம்குமார் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து திட்ட செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இதில் இளம் தொழில் வல்லுனர் சிவலிங்கம், மன்னார்குடி ஹெச்.டி.எப்.சி. வங்கியின் கிளை மேலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆடு வளர்ப்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் லட்சுமி வரவு செலவு தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்தார். கூட்டமைப்பின் துணை தலைவர் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.

    திட்டத்தின் நோக்கம் குறித்து கூத்தாநல்லூர் நிர்வாக இயக்குனர் முருகையன், முதன்மை செயல் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.

    நிகழ்ச்சியில் இயக்குனர் இடையூர் மாலா, விளக்குடி உஷா, கமலாபுரம் ஆரோக்யராஜ், சாந்தா, நீடாமங்கலம் சங்கீதா உள்பட 600-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆடு வளர்ப்பு உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் அலுவலர் அஸ்வின் அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் திருவாரூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் அலுவலர் அறிவழகன் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் தொழில் முனைவோரை உருவா க்குவது, பாரதி மூலங்குடி, தில்லைவிளாகம், ஆலங்குடி ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்குவது, ஆயிரம் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்கி கொடுப்பது, இயற்கை விவசா யம் மற்றும் இயற்கை உணவை முதன்மைப்படுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீருடைகள் 32 சாரணர்களுக்கு வழங்கப்பட்டது.
    • சாரண மாணவர்களுக்கு பயிற்றுனர் காசிநாதன் பயிற்சி அளித்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த அபிசேகக்கட்டளை அரசு மேல்நிலை ப்பள்ளியில் சாரணர் மாணவர்களுக்கான ஒரு நாள் முகாம் தலைமை யாசிரியர் ஈஸ்வரி தலைமை யில் நடைபெற்றது.

    முன்னதாக சாரணர் கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது.

    தொடர்ந்து, சாரணர்கள் பள்ளி வளாகத்தையும், சுற்றுப்புறத்தையும் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீருடைகள் 32 சாரணர்களுக்கு வழங்க ப்பட்டது.

    முன்னதாக சாரண ஆசிரியர் சண்முகவேல் அனைவரையும் வரவேற்றார். சாரண மாணவர்களுக்கு பயிற்றுனர் காசிநாதன் பயிற்சி அளித்தார்.

    நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் அம்பிகாபதி, பள்ளி ஆசிரியர்கள் குணசே கரன், சவுந்த ரராஜன், பாலசுப்பிரமணியன், அன்பழகன், தமிழ்செல்வி, சாந்தி, சுரேஷ், அபிராமி, விஜயா, செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடக்கிறது.
    • புத்தகரம், வவ்வாலடி, பாக்கம் கோட்டூர், ஆகிய ஊர்களுக்கும் மின்சாரம் இருக்காது.

    திருவாரூர்:

    திருவாரூர் உதவி செயற்பொறியாளர் இயக்குதலும் பராமரித்தலும் பிரபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நன்னிலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(சனிக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நன்னிலம், நல்ல மாங்குடி, வடகுடி, கம்மங்குடி, குலக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூர், பனங்குடி, ராசாகருப்பூர், மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், குவலைக்கால், விசலூர், மூங்கில்குடி, காக்கா கோட்டூர், ஆணைகுப்பம், மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூளை, கீழ்குடி, சிகார்பாளையம், நாடாக்குடி, வீதி விடங்கன், பூங்குளம், புளிச்சக்காடி, ஏனங்குடி, புத்தகரம், வவ்வாலடி, ஆதலையூர், பாக்கம் கோட்டூர், ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிளை செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    • விழா ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேமம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநில மருத்துவ அணி தலைவர் கனிமொழி, என்.வி.என்.சோமு எம்.பி. மற்றும் செயலாளர் மரு.எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ ஆகியோரின் அறிவுறுத்தல்படி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் அஞ்சுகம் பூபதியின் வழிகாட்டுதல் படி, மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ.வின் ஆலோசனை ப்படி அண்ணா பிறந்தநாள் மற்றும் கருணாநிதி நூற்றா ண்டு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட மருத்துவ அணி சார்பில் திருத்துறைப்பூண்டி அடுத்த விளக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ அணி தலைவர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார்.

    மாவட்ட அமைப்பாளர் திவாகரன் சுபாஷ், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் பிரகாஷ், ஊராட்சி தலைவர் தனலஷ்மி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட மருத்துவ அணி துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள் வீரராகுல் (திருத்துறைப்பூண்டி), அரவிந்தன் (மன்னார்குடி), ஒன்றிய துணை தலைவர் ராமகிருஷ்ணன், துணை அமைப்பாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தொகுதி துணை அமைப்பாளர் தீபன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.

    • மன்னார்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
    • இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடக்கு தென்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 60) இவர் நேற்றிரவு இரவு மன்னார்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

    அப்போது மன்னார்குடியிலிருந்து சோழபாண்டி நோக்கி நவீன் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    இரண்டு வாகனங்களும் இடையர்நத்தம் எனும் இடத்தில் வந்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சேகர்( 60)என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மற்றொரு இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்த நவீன் கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பூரண மதுவிலக்கை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.
    • ரத்தவங்கி கட்டிடத்தை திறந்து செயல்படுத்த கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் தெற்கு மாவட்ட அக்டோபர் மாத நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட தலைவர்யாசர் அரபாத் தலைமையில் முத்துப்பேட்டையில் நடைப்பெற்றது.

    இதில் மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் ஹாஜா முகைதீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஹாஜா மைதீன், அப்துர் ரசீது, முகமது வாசிம்,முகமது தவ்பீக், மாவட்ட மாணவரணி ராஜா முகமது, மருத்துவரணி அப்துர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில், முஸ்லிம் சிறைவாசிகளை தமிழ்நாடு அரசு காலதாமதம் செய்யாமல் விடுதலை செய்ய வேண்டும்.

    பூரண மதுவிலக்கை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.

    முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும் திருத்துறைப்பூண்டியில் கட்டப்பட்ட ரத்தவங்கி கட்டிடத்தை திறந்து செயல்படுத்த வலியுறுத்தி வரும் 18-ம் தேதி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    முடிவில் மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான் நன்றி கூறினார்.

    • மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
    • கல்லூரியை சேர்ந்த 200 பேருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

    கல்லூரி யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார்.

    பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் வரதராஜன், மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் என்.விஜயகுமார், நிலைய மருத்துவர் கோவிந்தராஜ், கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமை திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலைமங்கலம் பாலு தொடங்கி வைத்தார்.

    பாரதிதாசன் பல்கலைக்கழக மண்டல இணை இயக்குனர் தஞ்சை தனராஜன் சிறப்புரையாற்றினார்.

    ரத்ததான முகாமில் கல்லூரியை சேர்ந்த 200 பேருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது.

    அவர்களில் தேர்வு செய்யப்பட்ட 50 ரத்த தானம் வழங்கினர்.

    இரத்தம் சேகரிக்கும் பணியை மன்னார்குடி ரத்த வங்கி பொறுப்பு மருத்துவர் காத்தி காயினி தலைமையிலான மருத்துவ குழுவினர் இரத்தம் சேகரித்தனர்.

    ரத்ததான முகாமை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மன்னார்குடி வட்ட கிளை துணைத்தலைவர் என். ராஜப்பா, மன்னார்குடி இரத்தக்கொடையாளர்கள் ஒருங்கிணைப்பு மைய பொறுப்பாளர் கார்த்தி கேயன், கவிஞர் தங்கபாபு ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

    ×