search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேன் டிரைவரை மிரட்டி  செல்போன்-பணம் பறித்த  3 வாலிபர்கள் கைது
    X

    கைதான 3 வாலிபர்களை படத்தில் காணலாம்.

    வேன் டிரைவரை மிரட்டி செல்போன்-பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது

    • 1000 ரூபாய் பணத்தையும் செல்போனையும் பறித்து சென்று விட்டதாக போலீசில் புகார் தெரிவித்தார்.
    • 3 பேரை கைது செய்து விசாரணை செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    தருமபுரி,

    அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தடங்கம் மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் நேற்று அதிகாலை சுமார் 3 மணிக்கு சிறுநீர் கழிப்பதற்காக சேலத்தில் இருந்து ஈச்சர் வண்டியில் பார்சல் எடுத்து வந்த வாகன ஓட்டுநர் முனியப்பன் மகன் வேலு(வயது 42) என்பவர் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றார்.

    அப்போது அங்கே மறைந்திருந்த மூன்று நபர்கள் வேலுவை மிரட்டி சுமார் 1000 ரூபாய் பணத்தையும் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனையும் பறித்து சென்று விட்டதாக போலீசில் புகார் தெரிவித்தார். வேலுவின் புகாரின் பேரில் அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதனை அடுத்து உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை சி.சி.டி.வி. காட்சி மூலம் கண்டறிந்து தருமபுரி எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சார்ந்த சக்திகுமார்(19) , ஜெயசூர்யா(24), சையத் மன்சூர்(22) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×