search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அனுமதியின்றி மது விற்பனை செய்த  3 பேர் கைது
    X

    அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேர் கைது

    • 1141 மது பாட்டில்கள், இருசக்கர வாகனம் பறிமுதல்
    • 1081 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ராதாவை கைது செய்தனர்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 40). கூலித் தொழிலாளி. நேற்று அதிகாலை பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மாரியம்பட்டி கிராமத்தில் உள்ள சந்து கடை நடத்தும் ராதா(55) என்பவரின் வீட்டிற்கு சென்று மது வாங்கி உள்ளார்.

    அப்போது மூடியை திறந்தவுடன் ஒரு விதமான நாற்றம் அடித்ததால் இதுகுறித்து ராதாவிடம், செல்வம் கேட்டுள்ளார். நன்றாக போதை ஏறும் குடி என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றவர் தலைசுற்றி, மயக்கம் அடைந்து வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கெய்க்வாட் தலைமையிலான போலீசார் மாரியம்பட்டி கிராமத்திற்கு சென்று ராதாவின் வீட்டை சோதனையிட்டனர்.

    சோதனையில் அரசு மதுபான கடையிலிருந்து 1081 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ராதாவை கைது செய்தனர். அதேபோன்று பாலக்கோடு அருகே உள்ள வெளங்காடு பகுதியில் மது பாட்டில் விற்கபடுவதாக வந்த தகவலின் பேரில் மாரண்ட அள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வைத்து ஒரு நபர் மது பாட்டில் விற்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அதே பகுதியை சேர்ந்த பொன்முடி (51) என்பது தெரியவந்தது.இதையடுத்து அவர் வைத்திருந்த மதுபாட்டில்கள் 31 மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    அதேபோன்று ஓகேனக்கல் சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு மது விற்ற அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் மாதேஷ் (27) என்பவர் மது விற்று கொண்டிருந்தார் .அவரை கைது செய்து அவரிடமிருந்து 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×