search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரிமங்கலம் பகுதியில் அடுத்தடுத்து மாணவி உள்பட 3 பேர் மாயம்
    X

    காரிமங்கலம் பகுதியில் அடுத்தடுத்து மாணவி உள்பட 3 பேர் மாயம்

    • காரிமங்கலத்தில் சந்தைக்கு செல்வதாக கூறி சென்ற ரேகா பின்னர் வீடு திரும்பவில்லை.
    • குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் ஊராட்சி சொன்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தன பாண்டியன். இவரது மனைவி வினோதினி (வயது23).இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

    கடந்த 13-ம் தேதி வினோதினி தனது இரண்டு குழந்தைகளுடன் மாயமான நிலையில் அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதே போல் காரிமங்கலம் அடுத்த குப்பங்கரை பகுதியை சேர்ந்த செல்வம். இவரது மனைவி ரேகா (வயது 23). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    நேற்று முன்தினம் காரிமங்கலத்தில் சந்தைக்கு செல்வதாக கூறி சென்ற ரேகா பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து கணவர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல் காரிமங்கலம் அரசு கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவி விடுதியில் இருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதியில் இருந்து வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்த காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×