என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பைக் திருடிய 2 வாலிபர்கள் கைது
வாணியம்பாடி:
வாணியம்பாடி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் இர்பான். ஐடி நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று புதூர் மேம்பாலம் அருகே பைக்கை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் பைக்கை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பைபாஸ் ரோட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி விசாரணை நடத்தினர். பைக்கில் வந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். சந்தேகம் அடைந்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் புதூரில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிய திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (23), குபேந்திரன் (22) என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 பைக்குகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்