search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் விபத்தில் டிரைவர் சாவு
    X

    பைக் விபத்தில் டிரைவர் சாவு

    • சர்வீஸ் ரோட்டில் சென்ற போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த புள்ளானேரி புரத்தான் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 37). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி சர்மிளா என்கின்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கார்த்திக் நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து பச்சூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது நாட்டறம்பள்ளி அருகே செல்லும் போது பைக்கில் இருந்து எதிர்பாராத விதமாக தவிறி விழுந்தார். இதில் தடுப்பு சுவர் மீது தலை மோதியதால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சர்மிளா கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×