search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோரம் மயங்கி கிடந்த முதியவர் ஆஸ்பத்திரியில் சாவு
    X

    ஜோலார்பேட்டை பகுதியில் சாலையோரம் மயங்கி நிலையில் இருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சாலையோரம் மயங்கி கிடந்த முதியவர் ஆஸ்பத்திரியில் சாவு

    • அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் ரெயில்வே மேம்பாலம் அருகே சுமார் 50 வயது தக்க முதியவர் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று மயங்கி கிடந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் நேற்று முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் மாநிறத்தில் உள்ளார். சிமெண்ட் கலர் பேண்ட் வெள்ளை நிறத்தில் நீல நிற கோடு போட்ட அரை கை சட்டை அணிந்துள்ளார்.

    அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×