search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
    X

    மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

    • ஏலகிரி மலையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் வழங்கப்பட்டது
    • ஊராட்சி மன்ற தலைவர் அதிகாரிகள் பங்கேற்பு

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலையில் அத்தனாவூர் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் இப்பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று ஏலகிரி மலையில் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 2021 -2022 ஆண்டிற்கான விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தினை ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் தலைமை தாங்கி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் அருள் மேரி, தலைமை ஆசிரியர் விக்டோரியா, மேலும் இவ்விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×