என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ரெயில்வே தரைபாலங்களை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு
- மழைநீர் தேங்குவதை தடுக்க மாற்று வழிமுறை
- வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே கட்டேரி ஊராட்சியில் லாரி த ஷெட்பகுதியில் ஒரு தரைப்பாலமும், பக்கிரிதக்கா பகுதியில் க ஒரு தரைப்பாலமும் உள்ளது. கட்டேரி, அம்மையப்பன் நகர், திரியாலம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த 2 ரெயில்வே தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மழைக்காலங்களில் இந்த 2 தரைப்பாலங்களிலும் குளம் போல் மழைநீர் தேங்கி விடுவதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சுமார் 3 கிலோ தூரம் சுற்றி செல்லும் அவல நிலை உள்ளது.இதனால் மீட்டர் இங்குள்ள பொதுமக்கள் இந்த பகுதியில் ரெயில்வே மேம்பா லம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்ற னர். சுதந்திரதின விழாவிற்கு முன்பு அப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காததால் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம். எல்.ஏ.க்கள் தேவராஜி, நல்லதம்பி மற்றும் அதிகாரிகள் நேற்று தரைப்பாலங்களை ஆய்வு செய்தனர். அப்போது ரெயில்வே மண்டல முதுநிலை பொறியாளர் மயிலேரி, உதவி மண்டல பொறியாளர் விகாஸ் யாதவ் ஆகியோரிடம், பணிகள் மேற் கொள்வதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து உடனடியாக ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து கேத்தாண்டப்பட்டி ரெயில்வே தரைப்பாலம், சிகரலப்பள்ளி ரெயில்வே சுரங்க பாதை ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டு பாலங்களில் மழைநீர் தேங்குவதை 'தடுக்க மாற்று வழிமுறைகள் குறித்து ரெயில்வே அதிகாரிக ளிடம் ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என். -கே.ஆர்.சூர்யகுமார், மாவட்டகவுன்சிலரும், கிழக்கு ஒன்றிய செயலாளருமான சி.கவிதா தண்டபாணி, மாவட்ட கவுன் சிலர் ஜெ.சிந்துஜா ஜெகன், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே.சதீஷ்குமார், ஜோலார்பேட்டை நகர செயலாளர்.ம.அன் பழகன், ஒன்றிய கவுன்சிலர் ஆ.கலா ஆஞ்சி, நகர மன்ற தலைவர் காவியா விக்டர், நகராட்சி ஆணையாளர் பழனி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்