search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    லட்சுமி நாராயணர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    லட்சுமி நாராயணர் கோவில் கும்பாபிஷேகம் நடந்த காட்சி.

    லட்சுமி நாராயணர் கோவில் கும்பாபிஷேகம்

    • புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது
    • ஏராளமானோர் பங்கேற்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா கருப்பனூர் கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ லட்சுமி நாராயணர் கோவில் மகா கும்பாபிஷேகம் நகராட்சி கவுன்சிலர் குட்டி என்கிற சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை விக்னேஷ்வர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்துபுண்யாஹம், வாஸ்து சாந்தி, கலசஸ்தாபிதம், அங்குரார்பனம், முதல் கால கலச பூஜை, விசேஷ திரவ்ய ஹோமங்கள். பூர்ணாஹுதி, வேதம், கீதம் தீபாராதனை, 2, கால பூஜை, புண்யாஹம், 3 ம் கால கலச பூஜை, மஹா சாந்தி ஹோமங்கங்கள தம்பதிகள் சங்கல்பம், மஹா பூர்ணாஹுதி, மேளதாளங்களுடன் கலசம் புறப்பாடு நடைபெற்றது.

    தொடர்ந்து முக்கிய நிக ழ்வாக கோபுரகலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    அப்போது கூடி இருந்த பக்தர்கள் நாராயணா, கோவிந்தா, என கோஷமிட்டனர், நிகழ்ச்சியில் எம் எல்ஏ க்கள், ஏ. நல்லதம்பி, மதியழகன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், ஒன்றிய குழு தலைவர் விஜியா அருணாச்சலம், ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். பின்னர் லட்சுமி நாராயணர் சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சாமி திருக்கல்யாணம் வானவேடிக்கைகள் நடைபெற்றது.

    Next Story
    ×