என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாட்டறம்பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை
- மாநில அளவிலான தடகளப் போட்டியில் சாதனை
- ஆசிரியர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே எல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மகள் கீர்த்திகா (வயது 16). இவர் நாட்டறம்பள்ளியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார் .
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 17 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 35வது மாநில அளவிலான ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில் ஈட்டி எறிதல் போட்டியில் நாட்டறம்பள்ளி மாணவி கீர்த்திகா பங்கேற்று 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.
இந்நிலையில் அவர் பயிற்சி பெற்ற நாட்டறம்பள்ளியில் உள்ள எஸ்கே விஎஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நிர்வாகி மதன் குமார் தலைமையில் தங்க பதக்கம் பெற்ற மாணவிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்