என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரெயிலில் கடத்திய போதை பொருட்கள் பறிமுதல்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை ரெயில் வே சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆர்.சுப்பிரமணி, தலைமை காவ லர் பெல்சியா மற்றும் போலீ சார் நேற்று மாலைஜோலார் பேட்டைமார்க்க மாக செல்லும் ரெயில்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது உத்தரபிரதேச மாநி லம் தானாபூரிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு செல் லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. அப்போது ரெயில்வே போலீசார் ரெயிலில் பொதுப்பெட்டியில் சோதனை செய்த போது கழிவறையின் அருகே கேட்பாரற்று கிடந்த 5 பேக்குகளை சோதனை செய்தனர்.
அதில் தடை செய்யப் பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இதை கடத்தியவர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஒடிசா மாநிலம், கெண்டுஜார், பாங்கோ பகுதியை சேர்ந்த சோமநாத் பொரிடா (வயது 62) என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து ரெயில்வே போலீசார் அவரை கைது செய்து 60 கிலோ கிலோ குட்கா போன்ற போதை பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்