search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோலார்பேட்டை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை
    X
    கோப்புப்படம்

    ஜோலார்பேட்டை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

    • கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு
    • 4 குழந்தைகள் உள்ளனர்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி தேங்காய் தோப்பு வட்டம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா இவர் கட்டிட தொழிலாளி இவரது மனைவி மேனகாகாந்தி (வயது 35) இவர்களுக்கு 3 பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன.

    கடந்த சில வருடங்களாக கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் மேனகா காந்தி மனஉளைசலுக்கு ஆளானார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து மேனகா காந்தி சகோதரர் திருப்பதி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்‌.

    Next Story
    ×