search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    8 பைக்குகளை திருடிய வாலிபர் கைது
    X

    8 பைக்குகளை திருடிய வாலிபர் கைது

    • வாகன சோதனையில் சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் பகுதியில் கடந்த ஒரு மாதமாக பைக்குகள் அடிக்கடி திருடும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இதனைத் தொடர்ந்து ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று காலை பைபாஸ் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கர்நாடகா மாநிலம் பங்காருபேட்டை டவுன் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 35) என்பவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ஆம்பூர் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அருண்குமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில் பதுக்கி வைத்திருந்த 8 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் அருண்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×