என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடம் பஸ் நிலையத்தில் செல்போன் திருடிய 2 பேர் கைது
- கல்லூரி மாணவரின் செல்போனை திருடியதாக கூறப்படுகிறது.
- பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் விடுமுறையை முன்னிட்டு உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பல்லடத்தில் இருந்து கோவை செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார்.அப்போது அவரின் அருகே இருந்த 2 பேர் கல்லூரி மாணவரின் செல்போனை திருடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கல்லூரி மாணவர் அவர்களை பிடித்து திருடன் திருடன் என சத்தம் போட்டு உள்ளார். பஸ்சில் இருந்தவர்கள் அந்த 2 பேரையும் பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்துள்ளனர். இதையடுத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை பல்லடம் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் இருவரும் புதுக்கோட்டையை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் ராம்ஜி(19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும் மற்றொருவரை சிறையிலும் போலீசார் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்