search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மடத்துக்குளம் வேளாண்மை அலுவலகத்தில் தென்னங்கன்றுகள் விற்பனை
    X

    கோப்புபடம்

    மடத்துக்குளம் வேளாண்மை அலுவலகத்தில் தென்னங்கன்றுகள் விற்பனை

    • முதல் கட்டமாக நெட்டை-குட்டை ரக தென்னங்கன்றுகள் 700 வந்துள்ளது.
    • அதிக எண்ணிக்கையில் தென்னங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

    மடத்துக்குளம்:

    கூலி ஆட்களுக்கு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் பல விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் விவசாயிகளுக்கு தரமான தென்னங்கன்றுகள் சரியான விலையில் கிடைக்கும் வகையில் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் தென்னங்கன்றுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள பண்ணையில் தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தென்னங்கன்றுகளை விவசாயிகளுக்கு வினியோகிக்கும் வகையில் வேளாண்மைத்துறை அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

    தற்போது முதல் கட்டமாக நெட்டை-குட்டை ரக தென்னங்கன்றுகள் 700 வந்துள்ளது.இந்த ரகத்தை இளநீர் மற்றும் தேங்காய் உற்பத்திக்கு பயன்படுத்தலாம்.அதனை ஒரு கன்று ரூ. 125 என்ற விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.

    தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அணுகலாம். புதிதாக நடவு செய்யும் வகையில் அதிக எண்ணிக்கையில் தென்னங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.மடத்துக்குளம் வட்டாரத்துக்கு நடப்பு ஆண்டில் 2500 தென்னங்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    Next Story
    ×