search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே தூக்குப்போட்டு பள்ளி மாணவன் தற்கொலை
    X

    கோப்புபடம்

    பல்லடம் அருகே தூக்குப்போட்டு பள்ளி மாணவன் தற்கொலை

    • கள்ளிப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார் சூர்யா.
    • சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் ஊராட்சி வலையபாளையத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவரது மகன் சூர்யா (வயது 16 ). இவன் கள்ளிப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்தபோது திடீரென சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த சூர்யாவின் அண்ணன் சிவகிரி (18) எழுந்து பார்த்தபோது சூர்யா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சூர்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×