search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும்  கூட்டம் - 27-ந்தேதி நடக்கிறது
    X

    கோப்பு படம்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் - 27-ந்தேதி நடக்கிறது

    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 20- ல் நடைபெறுகிறது.
    • கூட்டமானது 27-ந்தேதி (புதன்கிழமை) அன்று மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.

    திருப்பூர்,செப்.24-

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் வருகிற 27-ந்தேதி ( புதன்கிழமை) நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்காக குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 20- ல் வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.இதில் மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் மனுவாக வழங்கலாம்.

    எனவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×