search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ெரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்
    X

    கோப்புபடம்

    பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ெரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்

    • சொந்த ஊர்களுக்கு செல்ல பாலக்காடு - சென்னை ரயிலை பயன்படுத்துகின்றனர்.
    • ெரயிலில் அமர இடமில்லாமல், நீண்ட தூரம் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டியதுள்ளது.

    உடுமலை:

    தமிழகத்தில் 31 ெரயில்கள் கூடுதலாக ஒரு ெரயில்வே நிலையத்தில் நின்று செல்லும் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, சேலம் ெரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் சென்னை- கோவை (12673) சேரன் எக்ஸ்பிரஸ் வரும், 19ந் தேதி முதல் காட்பாடி ெரயில் நிலையத்தில் இரண்டு நிமிடம் நிறுத்தப்படும்.

    பாலக்காடு- சென்னை (22652) ெரயிலானது வரும், 18ந் தேதி முதல் குடியாத்தம் ரெயில் நிலையத்திலும், சேலம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (22154) ெரயில் வரும், 18ந் தேதி முதல் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்திலும் 2 நிமிடம் நின்று செல்லும் என அறிவித்துள்ளது.

    இந்தநிலையில் பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ெரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரெயில் நிலையம் உள்ளது. தற்போது கோவை - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்தூர், திருவனந்தபுரம் - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து, ஏராளமானோர் உடுமலை வழியாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு ெரயில்களில் பயணம் செய்கின்றனர். மேலும் இங்கு தொழிற்சாலை, கம்பெனிகளில் பணிபுரியும் வட மாநிலத்தினரும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பாலக்காடு - சென்னை ரயிலை பயன்படுத்துகின்றனர்.

    ஆனால், அந்த ெரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைந்த அளவே உள்ளதால், அதில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறுகின்றனர். இதில் குழந்தைகள், முதியோர் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

    இதனால், அவர்கள் ெரயிலில் அமர இடமில்லாமல், நீண்ட தூரம் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டியதுள்ளது. எனவே, சென்னை ெரயிலில், பயணியரின் சிரமத்தை போக்கும் வகையில், கூடுதல் பெட்டிகள் இணைக்க, தெற்கு ெரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×