search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடுவாய் ஊராட்சியில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
    X

    மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்த காட்சி.

    இடுவாய் ஊராட்சியில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

    • அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சியில் இருந்து விலகி 55 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.
    • மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தி.மு.க. கட்சியின் துண்டு அணிவித்து வரவேற்றார்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் இடுவாய் ஊராட்சி ,சீரங்க கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஸ்ரீ செந்தில்நகர் பகுதியில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சியில் இருந்து விலகி 55 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.

    மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தி.மு.க. கட்சியின் துண்டு அணிவித்து வரவேற்றார்.இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இடுவாய் ஊராட்சி ஸ்ரீசெந்தில்நகர் பகுதியில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் தி.மு.க. கட்சி கொடியேற்றினார்.இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. சீராணம்பாளையம் கிளை செயலாளர் எஸ்.முத்துவேல் முன்னிலை வகித்தார்.மேலும் நிகழ்ச்சியில் இடுவாய் ஊராட்சி முன்னாள் அவைத்தலைவர் மேற்குத் தோட்டம் நடராஜ், தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் ரவி, 8-வது வார்டு முன்னாள் அவைத்தலைவர் சின்ராஜ், மற்றும் நிர்வாகிகள் , உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×