என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இ - நாம் திட்டம் மூலம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை ஏலம்
- உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் முதல் முறையாக கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது.
- விவசாயிகள் கொண்டு வரும் கொப்பரை தரம் வாரியாக ஏலம் விடப்படுவதால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
உடுமலை:
தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் துவக்கப்பட்டன. ஆனால் ஒவ்வொரு மையத்திற்கும் குறைவான கொள்முதல் இலக்கு வழங்கப்பட்டதால் பெரும்பாலான மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கொப்பரை விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தை (இ - நாம்) திட்டத்தின் கீழ் வாரம்தோறும் வியாழக்கிழமை கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது.
இது குறித்து ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணி ப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:-
தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் முதல் முறையாக கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது. இ - நாம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுவதால் தேசிய அளவிலான வியாபாரிகளும், உள்ளூர் வியாபாரிகளும் பங்கேற்கலாம். விவசாயிகள் கொண்டு வரும் கொப்பரை தரம் வாரியாக ஏலம் விடப்படுவதால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கு உரிய தொகை விவசாயிகள் வங்கிக்கணக்கில் உடனடியாக செலுத்தப்படும். விவசாயிகள், வியாபாரிகள் வருகையைப்பொறுத்து ஏல நாட்கள் அதிகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்