search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் குடிநீர் வழங்க வேண்டும் - அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
    X

    திருப்பூர் மாநகராட்சி வினோபா நகரில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மேயர் தினேஷ் குமார் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    5 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் குடிநீர் வழங்க வேண்டும் - அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

    • கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்படாத வகையில் மேயர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
    • வினோபா நகர் தண்ணீர் தொட்டியில் மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்படாத வகையில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.குடிநீர் வழங்கும் அதிகாரிகளுடன் இது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி எந்தெந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து கேட்டறிந்து வருகிறார்.இந்தநிலையில் இன்று காலை நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட 55 வது வார்டு வினோபா நகர் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனை தொடர்பான கோரிக்கையை ஏற்று வினோபா நகர் தண்ணீர் தொட்டியில் மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது குடிநீர் வினியோகத்தை 5 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க உத்தரவிட்டார்.

    தொடர்ந்து அப்பகுதியில் கழிவுநீர் வடிகால்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடியாக சுத்தம் செய்யுமாறு அலுவல ர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.இந்த ஆய்வின்போது அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×