என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கண்டக்டரை தாக்கிய குடிபோதை ஆசாமி கைது
- குடிபோதை ஆசாமியை பஸ்சை விட்டு இறங்கச் சொன்னபோது, அந்த ஆசாமி கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
- பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் கண்டக்டர் பேச்சிமுத்துவை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பல்லடம்:
பல்லடம் அரசு போக்குவரத்து கழக டிப்போவில் கண்டக்டராக பணிபுரிபவர் பேச்சிமுத்து(வயது 59). இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் பல்லடத்திலிருந்து திருப்பூர் செல்லும் டவுன் பஸ்சில் கண்டக்டர் ஆக பணிபுரிந்தார். பஸ் பல்லடத்தை அடுத்த தெற்கு பாளையம் பிரிவு பஸ் நிறுத்தத்தில் நின்ற போது, குடிபோதையில் பயணி ஒருவர் ஏறி உள்ளார். அவரிடம் பயணச்சீட்டு கேட்டபோது, கண்டக்டர் பேச்சிமுத்துவை அவர் திட்டி உள்ளார்.
இதையடுத்து விசில் அடித்து பஸ்சை நிறுத்திய கண்டக்டர், குடிபோதை ஆசாமியை பஸ்சை விட்டு இறங்கச் சொன்னபோது, அந்த ஆசாமி கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் கண்டக்டர் பேச்சிமுத்துவை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், கண்டக்டரை தாக்கிய பல்லடம் அருகே உள்ள சேட பாளையத்தை சேர்ந்த பெடரல் மார்க் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்