என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் விவசாயிகளுக்கு பொருளீட்டு கடன் வசதி - ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அறிவிப்பு
- ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேசிய வேளாண் சந்தை திட்டம் (இ-நாம்) செயல்படுத்தப்படுகிறது.
- விளை பொருளுக்குரிய தொகை உடனடியாக சம்பந்தப்பட்ட விவசாயியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
திருப்பூர் :
தேசிய வேளாண் சந்தை திட்டம் மற்றும் பொருளீட்டு கடன் திட்டங்களை பயன்படுத்தி பயன்பெறலாம் என திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வனிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேசிய வேளாண் சந்தை திட்டம் (இ-நாம்) செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் பொருட்களுக்கு அதிக விலை கிடைப்பதுடன், கொள்முதல் செய்த விளை பொருளுக்குரிய தொகை உடனடியாக சம்பந்தப்பட்ட விவசாயியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
வேளாண் விளைபொருட்களுக்கு விலை வீழ்ச்சியடையும் போது விளை பொருட்களை குறைந்த வாடகையில் 6 மாதம் வரை இருப்பு வைக்கும் வசதியும் உள்ளது. விலை உயரும் போது விற்பனை செய்யும் வகையிலான கிடங்கு வசதியும் உள்ளது. கிடங்குகளில் இருப்பு வைக்கும் விளைபொருட்கள் அடிப்படையில், பொருளீட்டுக்கடன் வழங்கப்படும். விவசாயிகளுக்கு 5 சதவீத வட்டியில் அதிகபட்சம் மூன்று லட்சம் ரூபாய் வரையில் பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. வியாபாரிகளுக்கு பொருளீட்டு கடனாக 9 சதவீத வட்டியில் அதிகபட்சம் 2லட்சம் ரூபாய் வரை பொருளீட்டுக்கடன் வழங்கப்படும்.ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேவைகளை பயன்படுத்தி விவசாயிகளும் வியாபாரிகளும் பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்